ஊர்:கொடுங்கோளூர்.அ-2 ,லோகாம்பிகைக் கோவில்
மூலவர்:பகவதியம்மன், ஸ்ரீ குறும்பா பகவதி
இறைவன்: மகாதேவர்
இறைவி:
பிறசன்னதிகள்: கணபதி,ஷேத்ரபாலன், வசூரிமலை, தவிட்டுமூர்த்தி
தி.நே-0600-1200,1600-2000
#-11.04.2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது(!)
கேரளாவின் முதல் காளிக் கோவில்.கொடுங்கல்லூரம்மா என்ற பேரில் திராவிடத்தின் பத்ரகாளி என்றும் ருத்திர மகா காளி என்றும் வணங்கப்படுகின்றாள். சேரன் செங்குட்டுவன் முதலில் கண்ணகிக்கு சிலையமைத்து கோவில் கட்டினான். காலப்போக்கில் சிலையின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் உண்டானது. பெர்யம்மை என்ற நோயை தவிர்க்க கொடுங்கல்லூர் பத்ரகாளியால் மட்டும் தான் முடியும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. பெரியம்மை குணமாக வசூரிமலை என்ற பிரதிஷ்டை உள்ளது. கண்டாகர்ணன் என்ற பூதம் பெரியம்மையை காளியின் உடம்பிலிருந்து நக்கித் துடைப்பதற்கு வந்தபோது அதற்கு உதவி செய்ய வசூரிமலையை பரமசிவன் படைத்தார் என்று நம்பப்படுகின்றது. பகவதி அம்மனிடம் மனமுருகி வேண்டினால் கண்டாகர்ணனையும் வசூரி மலையையும் அனுப்பி பெரியம்மையை ஈசன் குணப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)