ஊர்:அம்பாலபுழா
இறைவன்:ஸ்ரீகிருஷ்ணா
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-0300-1245,1700-2000
நினைத்தவுடன் கடவுளைத் தரிசனம் செய்யும் பாக்யம் பெற்ற வில்வமங்களம் சுவாமிகளும் அந்த பகுதியை ஆண்ட செண்பகசேரி ராஜாவும் படகில் செல்லும்போது இனிய வேணுகாண நாதத்தைக் கேட்ட சுவாமிகளுக்கு குழந்தை கிருஷ்ணர் காட்சியளிக்க பரவசப்பட்டவர் மன்னனும் திவ்விய காட்சியை காண வேண்தல் செய்ய, காட்சிகண்ட மன்னன் அந்த இடத்தில் கோவில் கட்ட ஏற்பாடு செய்தான். அம்பலம்- கோவில், ஆறு-புழை புழை அருகில் அம்பலம் இருந்ததால் அம்பலப்புழை என்றானது. காட்சியளித்த இடம் கணபதி ஆல். சிலை பிரதிஷ்டை செய்யும் போது சிலையின் கைப்பகுதி உடைந்து விழ உடனடியாக வேறு சிலையைத் தேட குறிச்சி என்ற பகை மன்னன் இடத்தில் இருக்க, பணிக்கர் ஒருவர் அச்சிலையை அங்கிருந்து கடத்தி தோமன் என்ற பிறமதத்தவர் வீட்டில் மறைத்து வைத்திருந்து இரவில் கொண்டு வந்து பிரதிஷ்டை.
சென்பகச்சேரி அரசர் சதுரங்கம் விளையாடிய முனிவரிடம் தோற்றதால் அவர் விருப்பப்படி முதல் கட்டத்தில் இருக்கும் நெல்லின் இரண்டு மடங்கு அடுத்த கட்டத்திற்கு என தொடர்து அனைத்து கட்டத்திற்கும் தன்னிடமும், மக்களிடமும் உள்ள எல்லா நெல்லையும் கொண்டு நிரப்ப முடியாதபோது எனக்கு நீங்கள் நெல் தரவேண்டாம் அதனை அரிசியாக்கி தினமும் பால்பாயசம் செய்து நிவேதித்து பக்தர்களுக்கு வணங்கச் சொல்லி மறைந்தார் முனிவர். இன்றளவும் பால்பாயசயம் நிவேதனம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)