ஊர்:பெருநாடு,வாளியக்கோயில்.பம்பைநதிக்கரை.
மூலவர்:சாஸ்தா
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-05-11,17-20
பெண்களின் சபரிமலை. பிப்ரவரி 10நாள் திருவிழா. ஆண்டு முழுவது ஆண்களுக்கு தரிசனம் தரும் சபரிமலை ஐயப்பன் வருடத்தில் ஒருநாள் பெருநாடு சாஸ்தா கோவிலில் பெண்களுக்கு தரிசனம் கொடுக்கின்றார்.
பந்தள மன்னர் ராஜசேகர மன்னனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்வரை மகனாகவும், அரக்கி மகிஷியை அழிக்க வேண்டும் என்பதற்காக நிகழ்ந்தது ஐயப்பன் அவதாரம். வளர்ப்புத்தாய்க்கு புலிப்பால் கொடுத்து பணி முடிந்ததும் துறவறம் மேற்கொள்ள வருத்தப்பட்ட மன்னனிடம் நான் விட்ட அம்பு விழும் இடத்தில் கோவில் கட்டி மகர சங்கராந்தியில் தரிசிக்க வாருங்கள் எனக்கூறினார். மன்னன் அந்தக் கோவிலை இந்தப் பெருநாட்டிலிருந்துதான் கட்டினான். இந்த இடத்தில் கட்டிய கோவில் வாளியக் கோவில் எனப்பட்டது. பந்தளா மன்னர் சபரிமலை சென்று ஐயப்பனைச் சந்திக்கும்போது அரசியும் மற்ற பெண்களும் இங்கு தங்கி பெருநாடு சாஸ்தாவை தரிசனம் செய்து வந்தனர். சபரிமலை மகரஜோதி முடிந்தவுடன் ஆபரணங்கள் பெருநாடு சாஸ்தாவிற்கு அணிவிக்கப்படுகின்றன.
வரை படம்: விரிவாக்கு(enlarge)