ஊர்:பரசனிக்கடவு,மடப்புரா.வல்லப்பட்டிணம்நதிக்கரை
மூலவர்:முத்தப்பன்,திருவப்பன்
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-
குழைந்தை வேண்டி பிரார்த்தனை செய்த தம்பதியினருக்கு வல்லப்பட்டண நதியோரம் திருநெட்டிகாலு எனுமிடத்தில் ஓர் ஆண் குழந்தை கிடைத்தது. முத்தப்பன் எனப் பெயரிட்டு வளர்ந்தான். நண்பன் திருவப்பன். திருவப்பன் ஒரு நாயை வளர்த்துவந்தான். இருவரும் வேட்டையாடிய பறவைகள் மீன்கள் போன்றவற்றைச் சுட்டு சுவைத்து சாப்பிட்டு மகிழ்ந்திருந்தனர். இதை அறிந்த முத்தப்பனின் தாய் வைதிக முறைப்படி வளர்ந்தவன் என்பதால் அவனை கடிந்து கொண்டாள். அன்று முத்தப்பன் வேடுவன் ரூபத்தில் தாய்க்கு காட்சிதந்து தான் நதியின் அக்கரையில் இருக்கப்போவதாக கூறி மறைந்தார். அப்போதுதான் தெரிந்தது தாங்கள் வளர்த்த மகன் இறைவன் சிவன் என்று. இறைவன் மனித அவதாரம் எடுத்தாலும் தன் நண்பன் திருவப்பனையும் நாயையும் கடைசி வரை தன்னுடன் வைத்துக் கொண்டார்- முத்தப்பன். மாலை-1845 சிறப்பு பூஜை இறைவன் நண்பன் திருவப்பன் மற்றும் நாய் மூவருக்கும். மாதத்தின் கடைசி நாளன்று மட்டும் வைதீக முறைப்படு பூஜை, மற்ற நாட்களில் கள், சாராயம், மீன், சாதம், தேங்காய் போன்றவை நிவேதனம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)