ஊர்:பள்ளிபுரம்
மூலவர்:தோணல்தேவி.மகிஷாஷமர்த்தினி
இறைவன்: சிவன்
இறைவி:
பிறசன்னதிகள்: கணபதி, நாகர்,
தி.நே-0500-1030,17-2000
கார்த்திகை உற்சவம் சிறப்பு. மூலவிக்ரகம் கடுகுசர்க்கரையால் செய்யப்பட்டது. இது போன்றே பத்மநாப சுவாமி கோவில் விக்ரமும் தயாரிக்கப்பட்டது. அதனால் அபிஷேகம் கிடையாது. கிழே இருக்கும் பஞ்சலோக விக்ரகத்திற்கு அபிஷேகம். 108 துர்க்கா ஆலயங்களில் ஒன்று. சுற்றுப்புறச் சுவர்களில் சிறப்பான சிற்பங்கள். சிற்றூர் மடத்தில் இருந்த தேவியின் விக்ரகத்தில் சைதன்யம் குறைந்து விட்டதாக அதை வணங்கியவர்கள் கண்டு மனமுருகி பிரார்த்தித்து தேவபிரஸ்னம் வைத்தபோது திருவனந்தபுரத்தின் பள்ளிபுரத்தில் உள்ள தேவியின் விக்ரகத்தில் அந்த சைத்தன்யம் நிறைந்துள்ளதாக தோன்ற அது சரியா என ஆராய பலர் பள்ளிபுரம் வந்து தங்கியிருந்து 'களமெழுத்து பாட்டு எனும் சடங்கு செய்து பூஜை செய்து திருக்கார்த்திகை உற்சவத்தை நிறைவாகச் செய்தனர். பின் வந்தவர்கள் புனர் பிரதிஷ்டை செய்தனர். நாளடைவில் சரியாக பராமரிக்கப் படாமல் நலிந்து இருக்கும்போது ஆற்றிங்கல் என்ற இடத்தில் இருந்த திருவாராட்டுக்காவு என்ற ராஜ குடும்பத்து கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த ராஜாவின் குதிரைவண்டி இந்த இடத்திலிருந்து ஒடாமல் நின்று விட்டது. அப்போது ஊர் மக்கள் கோவில் நிலையை சீர்படுத்துமாறு வேண்டினர். மகாராஜவும் கோவிலை புனரமைப்பு செய்து கொடுத்தார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)