செல்லும் வழி: பாலக்காடுஅருகில், பொள்ளாச்சி-33
தகவல்கள்: ஊர்:தெனாரி-ராமதீர்த்தம்மூலவர்: ஸ்ரீராமா-லட்சுமணர்இறைவன்: இறைவி:தாயார் உ: பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅனுமன்மரம்: அரசு, வேம்புதீர்: சரகங்கா-ராமதீர்த்தம்கேரள தாந்திரீக முறைப்படி இருகால பூஜைகள். தி.நே-0530-1030,1700-1930
சிறப்புகள்: வரலாறு-வனவாச காலத்தில் ராமரும் லட்சுமணனும் இங்குள்ள யோக நதியில் நீராடிய போது ராமர் தனது மரவுரியையும் அம்பாரத் துணியையும் எடுத்துவரச் சொல்ல ஏதோ நினைவில் லட்சுமணன் இருந்துவிட அச்சமயத்தில் வானிலிருந்து அசரீரி, அண்ணன் சொல் தட்டியதால் அவரை வழிபட உனக்குத் தகுதியில்லை. கங்கை நதியில் நீராடி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தால் உன் தோஷம் நீங்கும் என்றது. வருந்திய லட்சுமணன் அவ்வழி வந்த ஞானசுருதி என்ற ரிஷியிடம் நடந்ததைச் சொல்லி வழிமுறையைக் கேட்க அவர் அருகில் மத்யானயேஸ்வரர் சேத்திரம் உள்ளது. கங்காதேவியை பிரார்த்தனை செய்தால் அவர் இங்கு வருவார். அதில் நீராடி மத்யானயேஸ்வரரை வழிபடு என்றார். அப்படியே அம்பெய்த கங்கை வெளிப்பட அதில் நீராடி இறைவனை வழிபட்டு தன் தோஷத்தைப் போக்கிக்கொண்டான். ராமரும் அங்குள்ள பிரம்ம குண்டத்தில் நீராடி காசி விஸ்வநாதரைத் தரிசனம் செய்தார். சிலகாலம் இங்கே தங்கி தந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தார் ராமர். அந்த தீர்த்தம் சரதீர்த்தம் எனப்பட்டது. இந்தப் பகுதி ராம தீர்த்தம் எனப்பட்டது. ஆடி அமாவாசையன்று பித்ரு தர்ப்பணம் செய்வது சிறப்பு. வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்:
Located in: TRISSUR-திருச்சூர்