ஊர்: அத்திப்பொட்டா மூலவர்: மாங்கோட்டுக்காவுபகவதி
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்: காவல்தெய்வம் மூக்கன் சாத்தன்.
தி.நே- 0500-1100,1700-2000.ஞாயிறு, செவ்வாய், வெள்ளி பகல் 1200மணிவரை
காவச்சேரி பாரக்காட்டு பகவதியின் இளைய சகோதரியான இவள் குட்டன் என்கிற நெசவாளரின் வழக்குத் தீர்க்க இங்கு குடி கொண்டவள். குட்டன் வியாபாரம் அம்மன் அருளால் நன்றாக நடந்தது. வியாபாரத்தின் போது வந்திருந்த பக்கத்து ஊர்வியாபாரியின் பட்டுத்துணி மூட்டை ஒன்று காணாமல் போக அந்தப்பழி குட்டன்மேல் விழுந்தது. வழக்கு நடந்தது. தவறான குற்றச் சாட்டினால் மனம் குன்ற உடல் நலம் கெட்டு வியாபாரம் செய்ய முடியாமையால் குடும்பம் வறுமையில் திண்டாடியது. காவச்சேரி அம்மனை மனமுருக வேண்ட குட்டனின் குடை பறந்து சென்று ஓரிடத்தில் நிற்க அங்கிருந்து யாராலும் குடையை எடுக்க முடியவில்லை. அப்போது குட்டன் குற்றமற்றவன். அவன் திருடியதாகச் சொல்லப்படும் பட்டுத்துணி மூட்டை கோவில் அருகில் உள்ள மாட்டுவண்டியருகில் இருக்கின்றது என பகவதி அசரீரி. மூட்டைகள் இறக்கும்போது அந்த மூட்டை உருண்டு ஒட அங்கிருந்த வைகோல் அதை மூட யாருக்கும் தெரியாமல்போக குட்டன்மேல் வீண்பழி என வருந்தினர். அந்த இடத்தில் கோவில் எழுப்பினர். குட்டன் உடல்நிலைதேறி மீண்டும் வியாபாரம் செய்து வந்தான். பக்தர்கள் வாங்கி வரும் தேங்காயை அவர் தலைச் சுற்றி மூக்கன் சாத்தன் முன்பு உடைக்கின்றனர்-தேங்காய்முட்டு. ஏப்ரல்-மே எழுநாட்கள் திருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)