ஊர்:மண்டசோர்,தபேஷ்வர்காட்.ஷிவ்னாநதிக்கரை,தஸ்புர்
இறைவன்:பசுபதிநாதர்-8முகம்,அஷ்டமுகிநாதர் (சர்வ,பவ,ருத்ர,உக்ர,பீம,பசுபதி, ஈசானன்,மகாதேவ்)
இறைவி:
பிறசன்னதிகள்: ரணஜீத், மாருதிராஜ், ஜானகிநாத், துர்கா, புராதன தபேஸ்வர்
7நிலைராஜகோபுரம்-90'நீ,30'அ,120'உயரம்
தீர்:ஷிவ்னாநதி தி.நே-
பசுபதிநாத் என்ற பெயரில் ஈசனுக்கு இரண்டு கோவில்கள் காட்மாண்ட், மண்டசோர் மட்டும்தான். லிங்கம்-8' உயரம், 10.5' சுற்றளவு, 4665 கிலே எடை கொண்டது. கடகரேகை அருகில்- இருப்பதால் குளிர் காலத்தில் சூரிய கதிர்கள் அதிக வெப்பம் தராது எனவே மந்தசூரிய- மண்டசோர். அஷ்டமுகி என எட்டு முகங்களைக் கொண்ட லிங்கம். மேற்புறமுள்ள 4 முகம் (வடக்கு முகம்- ஆனந்தம், சிரிப்பு, மேற்கு முகம்- ரௌத்ரமுகம், கிழக்கு முகம்- சாந்தி, சமாதானம், தெற்கு முகம்-சிங்கார ரஸம்.) வாழ்வின் 4கட்டங்களையும், கீழ்ப்புறமுள்ள 4முகங்கள் வாழ்வின் 4கட்டங்களில் பெறும் தர்மம், பெருள்-அர்த்தம், கர்மா-கடமை, மோட்சம் என எடுத்துக் காட்டுகிறது. ராஜகோபுரத்தில் 100கிலோ எடையுள்ள தங்க கலசம். ஷாஜி என்ற சலவைத் தொழிலாளியின் பார்வையில் திங்கட்கிழமை பட்ட லிங்கம் ஞாயிறு அன்று மண்டேசோர் தபேஷ்வர்காட் என்ற இடத்தில் நிலை பெற்று 21 ஆண்டுகள் 5மாதங்கள், 4 நாட்களுக்குப்பின் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மழைக்காலங்களில் ஷிவ்னா நதிவெள்ளம் உயர்ந்து லிங்கத்தை அபிஷேகம் செய்கிறது. ஆலயத்திற்கு நான்கு வாயில்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)