ஊர்:அன்ந்த.ஜோ-8/12 #
இறைவன்:நாகநாதன்
இறைவி:பார்வதி
பிறசன்னதிகள்:
தீர்-ருணமோசன்
தி.நே-0600-1900
#-06-02-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
ஜோதிர்லிங்கதலம்-8/12.நஞ்சாக மனதிலுள்ள தீய எண்ணங்கள் விலகும். லிங்கமெதிரில் நந்தியில்லை. கோவிலுக்குப்பின் நந்தி கோவில் தனியாக. 108 சிவகோவில்கள். 68 தீர்த்தங்கள். பார்வதி-சிறப்பு..
தட்சப்பிரஜாபதியின் யாகத்தீயில் புகுந்து உயிரை விட்ட பார்வதியை நினைத்து வருந்திய சிவன் காடுகளில் அலைந்து திரிந்தார். அமர்தகா என்ற இடத்தில் இருந்து வந்தார். வருத்தம் தொடர தன் உடலை பார்வதி உடல்போன்று சாம்பலாக்கினார். வனவாசத்திற்காக காட்டிற்குச் சென்ற பாண்டவர்கள் இங்கு தங்கினர். அவர்கள் வளர்த்த பசு நீர் அருந்த நதியோரம் சென்று நீர் அருந்தியபின் பாலை நதியில் சொரிவதைக் கண்ட பீமன் அண்ணன் தருமனிடம் சொல்ல அந்த இடம் ஒரு புனித தன்மை நிறைந்திருக்கும் என தருமன் சொன்னார்.நதி நீரை வற்ற்ச் செய்தபோது நடுவில் உள்ள நீர் கொதிக்கக் கண்டனர்.
அந்த நதியின் அடுத்த கரையில் தாருகன் முனிவர்களை துன்புறுத்தி வந்தான். முனிவர்கள் ஊர்வமுனியிடம் சரண் அடைந்தனர். அவர் அவர்கள் அழிய சாபம் கொடுத்தார். இதனால் கோபமுற்ற தருகன் தான் பார்வதியிடமிருந்து பெற்ற சக்தியினால் அந்த வனத்தை அப்படியே பெயர்தெடுத்து நடுக் கடலில் கொண்டு வைத்து விட்டான். அசுரர்கள் படகில் சென்று முனிவர்களை துன்புறுத்தி வந்தனர். சிறையில் அடைக்கப்பட்ட சுப்ரியா என்ற துறவி ஊண் உறக்கமின்ரி சிவனை வழிபட்டார், அதையருந்த தாருகன் அவனைக் கொல்லச் சொன்னான். அப்போது சிவன் அசுரர்களைக் வதம் செய்து சுப்ரியாவிற்கு அருள். பார்வதி விரும்பிய்படி அங்கு அசுரர்கள் வசிக்க அருள். பார்வதி அங்கு தோன்றிய சிவ ஜோதியை லிங்கத்தினுள் சேர்த்தாள்-நாகேஸ்வரர், நாகேஸ்வரி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)