ஊர்: ஸ்ரீநாதத்துவாரா
இறைவன்: ஸ்ரீநாதர்,பாலகிருஷ்ணன்
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-
ஸ்ரீநாதனின் வாசல்-ஸ்ரீநாதத்துவாரா. விஷ்ணுவின் அவதாரமான குருஷ்ணர் ஸ்ரீநாதன் என்கிற பாலகுருஷ்ணனாக எழுந்தருளியுள்ள தலம்-பஞ்சதுவாரகா-5/5. முதலில் இருக்கும் மோதிமகல் பணிஅயாளர்கள் குடியிருக்கும் பகுதி. ஸ்ரீநாதர் விக்ரகத்தை வல்லபாச்சாரியார் வடமதுரையில் பிரதிஷ்டை செய்தார். அந்நியப் படையெடுப்பின்போது இங்கு கொண்டுவந்து உதயப்பூர் ராணாசிங் உதவியுடன் பாதுகாத்து கோவில் கட்டினர். கர்ப்ப கிரகத்தின் மேற்கூரையில் வேதங்களைக் குறிக்கும் 4புலிகள் உருவம். மத்தியில் இருக்கும் சிவப்பு கலசத்தின்மீது சுதர்சன் சக்ரம் பதிக்கப்பட்டுள்ளது. கலசத்தின் அருகில் ஸ்ரீநாதருடைய பட்டுக் கொடியும் மற்ற ஆறு பருத்தி துணியிலான கொடிகள் கோகுலம், கோவர்த்தனம், மதுரா, பிருந்தாவனம், துவாரகை, பூரி போன்ற ஆறு இடங்களின் கொடிகளாகும். கொடிகள் மீது காகம் அமர்ந்து அசுத்தப்படுத்திவிடாமல் இருக்க கொடிகள் அருகே மூங்கில் கழியுடன் ஒருவர் காவலுக்கு. ஆயிரக்கணக்கான பசுக்கள் கொண்ட கோசாலையின் பால் அபிஷேகம் மற்றும் நிவேதனப் பொருள்கள் செய்யவும் பயன்படுகிறது. வருடத்திற்கு ஒரு நாள் பசுக்களுக்கு தரிசனம். ஸ்ரீநாதர் தினமும் ஏழு தரிசனங்கள். 5மணிக்கு மங்கலா- நிர்மால்ய தரிசனம். அடுத்து சிருங்கார், கவால், ராஜ்போக், உத்யாபன், போக், சயன் என்ற தரிசனங்கள். அரை மணிக்கு ஒரு தரிசனம் என இடைவேளையின்றி தொடர்ந்து தரிசனம். ஒவ்வொரு தரிசனத்திற்கும் அலங்காரங்களும் உடைகளும் மாறுபடும். ஒரு முறை அணியப்பட்ட உடை மறுமுறை அணிவிக்கப்படுவதில்லை. வஸ்திரங்களைத் தைக்க கோவில் வளாகத்தில் ஏழு தையல் கலைஞர்கள். அடுத்த தரிசனம் ஒலிபெருக்கியில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)