ஊர்:காசி#ஜோ-9/12வாரணாசி,வாரணா-ஆசி நதிகளிடையே ,மகாஸ்மாசானம்,அனந்தகானகம், அவிமுக்தம்,ருத்ரவாசம், முக்திபூமி, சிவபுரி,க்ஷேத்ரபூரி,
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவிஸ்வநாதர்(சு)
இறைவி: ஸ்ரீபார்வதி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅன்னபூர்ணி(போக்) ஸ்ரீஅவிமுக்தேஸ்வரர். ஸ்ரீதரகேஸ்வரர். ஸ்ரீசத்யநாராயணன்-மகாலட்சுமி, ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீதண்டபாணி, ஸ்ரீதுண்டிராஜ்கண்பதி.
மரம்: தீர்-பஞ்சகங்கா
தி.நே-0300-2300
# 06032010-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
ஜோதிர்லிங்கதலம்-9/12. விஸ்வம்- உலகம். உலக உயிர்களின் தலைவன். பழங்குடி காஸா வாழ்ந்த இடம்-காசி. விஷ்னுவின் காதனி விழுந்ததால்- மணிகர்னிகா. சிவனின் மாதிரி உலகம். சிவன் எப்போதும் வாசம் செய்யும் தலம். தண்டபாணி, காலபைரவர் காவல் காக்கும் நகரம். முக்தி எதிர் பாராதவர்களுக்கும் முக்தி, 64 தீர்த்த கட்டங்கள். முக்கியமானவை 1.அணகங்கா, 2.தசாத்வமேதம், 3.மணிகர்ணிகை, 4.பஞ்சகங்கை, 5.பாலாஜி, 6.லலிதா, 7.திரிபுரபைரவி, 8.அஹல்யாபாய், 9.கேதார், 10.ஹனுமான், 11.துளசி. 12.பிரயாக். காசியின் 8 திக்குகளிலும் பைரவர் கோவிலகள். 1.அசிதாங்க பைரவர்-விருத்தகாலர் கோவில், 2.க்ரோத பைரவர்- காமாட்சி ஆலயம், 3.உன்மத்த பைரவர்- பீமசண்டி, 4.குரு பைரவர்- அனுமன்காட், 5.கபால பைரவர்- லாட்பஜார், 6.சண்ட பைரவர்-துர்க்கை கோவில், 7.பீஷ்ன பைரவர்- பூதபைரவம், 8. சம்ஹார பைரவர்-த்ரிலோசன சங்கமம். காசி விஸ்வநாதருக்கு நாமே அபிஷேகம் செய்யலாம்.
திருமணம் முடிந்து புதுமணத் தம்பதியராக இமவான் வீட்டில் இருந்தபோது பார்வதியின் தாய் மேனை பார்வதியிடம், உன்கணவன் ஆசாரமற்ற மயானப் பொடி கபாலங்களுடன் திரிந்தும், இழிவாக நடந்து கொண்டும் வீட்டின் தூய்மையை கெடுக்கின்றான். கணங்களை வீட்டில் சேர்கின்றான். இந்த மாதிரி ஒருவனை நான் எங்கும் பார்த்ததில்லை என்றாள். வருத்த முடன் என்னை உடனே நம் இல்லத்திற்கு கூட்டிச் செல்லுங்கள் என்று சொன்ன பார்வதியிடம் இதனைக் கேட்டறிந்த சிவன் கணநாதன் நிகும்பனை அழைத்து வாரணாசியில் உள்ள ஜனக் கும்பலை சாத்வீக முறையில் மன்னனுக்கு கோபம் வராவகையில் காலி செய்யச் சொன்னார்.
நிகும்பன் விருப்பப்படி காசியில் மங்கணன் நிகும்பனைப் போல் ஒரு விக்ரகம் செய்து பிரதிஷ்டை செய்து வழிபட மகப்பேறு இல்லாத மன்னன் திவோதாசன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு பூஜை செய்தும் புத்திர பாக்யம் கிடைக்காததால் கோபம் கொண்ட மன்னன் கோவிலை இடிக்க, நிகும்பன் மன்னைடம் கேட்க எங்கள் குறைகளைக் கேட்காத கோவில் எதற்கு என்றான். நிகும்பன் தெய்வ ஆரதானை மட்டும் போதாது அதற்கு முறபிறவி புண்னியங்களும் இருந்தால்தான் நற்பயன் கிட்டும் என்றான். கோவிலை இடித்தது மகாபாவம். உன்நகரம் நாசமாகும் என்றன். இந்த சாபம் நகரில் பரவ ஊர் மக்கள் நகரத்தை விட்டு வெளியேற மன்னன் தவம் செய்ய காட்டிற்குச் சென்றான். பின் ஈசனுக்கு தகவல் கொடுத்துவிட்டு ஈசன் வசிப்பதற்கு ஏற்ப புனர் நிர்மானம் செய்தான். அந்நகரமே காசி, வாரணாசி.
ஈசன் நீங்காமல் உறைவதால் அவிமுக்தேஸ்வரம். காமதேனு வழிபட்டது கோபிந்ரேக்கம் கரியில்-கோப்பியேசுவரர். பிரம்மன் வழிபட்டது கபிலாகாரம் கரையில்- ரிஷபத்துவாசன். மாதவன் வழிபட்டது பத்திரோதயக் கரையில்- அரணிய சர்ப்பயேசுவரர். பர்வதராஜன் வழிபட்டது- சைலேச்சுரர். பிரம்மன் அசுரர், அமரர்கள் வழிபட்டது- மத்திமேசர். பிரம்மன் மெற்றொரு இடத்தில் வழிபட்டது- இச்சுவலினேச்சுவரர். அவ்வியன், குபேரன், சம்வர்த்தன், வியாசர், மாயோன், நான்முகன், அக்கினி, சூரியன், சந்திரன், வழிபட்டது. இங்கு மரணமடைந்தோர்க்கு முக்தி நிச்சயம். காசி விஸ்வநாதர் வலதி காதில் தாரக மந்திரத்தை உப தேசிப்பார் என புராணங்கள் பகர்கின்றன.
வரை படம்: விரிவாக்கு(enlarge)