ஊர்:கஞ்சனூர்#தி.த-90+நவ-6/9. பலாசவனம், பிரமபுரி. பராசரபுரம், அக்னிபுரம், கம்சபுரம், முந்திரிபுரி.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅக்னீஸ்வரர்(சு)
இறைவி: ஸ்ரீகற்பகாம்பிகை.கற்பகநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீசுக்கிரன் 5நிலைராஜகோபுரம்.
மரம்-பலாச-புரச.:
தீர்-அக்னி,பராசர,கம்ச6காலவழிபாடு.
தி.நே-0700-1230,1600-2000
#02102003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(5)
தொலைபேசி-0435-2473737
புன்னாகவனம், கதலிவனம், வில்வவனம், பலாசவனம். காவிரி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி - உத்ர காவேரி. நடராசர் சபை தரிசிக்கத் தக்கது. குடும்ப அமைதி, மனைவி மகிழ்சிக்கு காரணமான சுக்கிரன். (வெள்ளி- தோஷபரிகாரம்- விவாகப்பிராப்தம், சௌபாக்யம், மலட்டு தன்மைநீக்கம்) சிறுவன் சுதர்சனர் பழுக்க காய்ச்சிய இரும்பு முக்காலிமீது அமர்ந்து சிவமே பரம் பொருள் என மும்முறை கூறியத் தலம். அவரே ஹரதத்தர். பராசரருக்கு முக்திதாண்டவக் காட்சி. பராசருக்கு சித்தபிரமை நீங்கியது, சந்திரனின் சாபம் நீங்கியது, கம்சன் உடற்பிணி நீங்கியது, கலிக்காமருக்கு திருமணம் நடந்தது ஆகிய பெருமைகளை உடைய தலம். சிவபஞ்சாட்சரத்தை சொல்லிய ஏழை அந்தனரைக் காக்க கல்நந்தி புல்லை உண்டதலம். குட்டி மதுரை-அம்பிகை சக்தி அதிகம். பிரம்மா விருப்பத்திற்கு சிவ அம்பிகை திருமணக்காட்சி- 3சனீஸ்வரர்கள். கோகர்ணத்தில் பிரம்மன் லோக லாபம் கருதி வேள்வி. கர்வமிகுதியால் அக்னி ஆகுதியை தேவர்களுக்குத்தராமல் தானே உண்டதால் பாண்டு ரோகம் என்ற சர்மநேய் ஏற்பட்டு ஆகுதிகளை ஏற்கமுடியாமல் தவிக்க வியாசமுனி வழிகாட்டுதலின்படி பலாசவனம் அடைந்து காவிரியில் நீராடி அக்னி பூஜை செய்ய சிவன் பார்வதியுடன் தோன்றி அக்னியின் பாண்டு ரோகம் (சோகைநோய்) தீர்த்தார். அக்னி வழிபட்டதால் அக்னீஸ்வரர். தர்மசிவன்- வேளாளர்- செல்வந்தர்- சிவபக்தியுடையவர்- அக்னீஸ்வரர் திருவிளையாடலால் அவரின் செல்வங்கள் அடியார்களுக்கு செலவழித்து தீர்ந்தன. வீட்டில் பயிராகும் சுரைக்காயை விற்று அடியவர்களை கவனித்துவந்தார். ஒரு சுரையை விதைக்கு என விட்டு வைத்திருந்தார். அவர் வெளியில் சென்றிருந்தபோது அடியார் ஒருவர் வரவே அவர் மனைவி அரை சுரைக்காயை அறுத்து அவருக்கு உணவு பரிமாற ஏற்பாடு செய்தாள் அப்போது அங்கே வந்த தர்ம சிவன் அடியார் விரும்பிய சுரையை முழுவதும் பயன்படுத்தாமல் அரை சுரைக்காயை அறிந்து அபசாரம் செய்து விட்டாய் எனக்கூறி அவர் கையை வெட்ட வந்தபோது ஈசன் உமையுடன் தோன்றி அருள். எனவே இன்றும் நெய்வேத்தியத்துடன் சுரைக்காய் உபயோகம். அசுர தேவர் யுத்தத்தில் அசுரர்கள் சுக்கிரன் வீட்டில் தஞ்சமடைந்தனர். விஷ்ணு சக்ராயுதத்தை அனுப்ப அது தஞ்சம் கொடுத்த முனிவரின் மனைவி சுகிர்தியையும் கொன்றது. சுக்கிரன் கோபம் கொண்டு பஞ்சாட்சாரம் ஓதி அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் தன் மனைவியை எழுப்புவிட்டு விஷ்ணுவிடம் போர்தொடுத்து பூலோகத்தில் மானிடனாகப் பிறக்க சாபமிட்டார், விஷ்ணு சுக்கிரன் சாபத்தை சிவன் யோசனைப்படி மக்களின் நன்மைக்காக பயன்படுத்த திட்டமிட்டு வாசுதேவகிக்கு சுதர்சனம் என்ற மகனாகப் பிறந்தார். பிறந்தவுடன் சிவ மந்திரம் சொல்லி. அக்னீஸ்வரர் கோவில் சென்று. வாசுதேவர் என்ன சொல்லியும் திருமால் புகழ் பாடாமல் சிவன் புகழைப் பாடி. சுதர்சனம் திருநீறு பூச வாசுதேவர் அவனை வீடைவிட்டு வெளியே அனுப்ப கோவிலில் தங்கினார். நள்ளிரவில் தட்சிணாமூர்த்தி வடிவில் தோன்றி ஹரதத்தர் எனப் பட்டம் அளித்து ஞான உபதேசம் செய்தார். சுக்கிர தோஷம் நீங்கப் பெற்றார் திருமால்-சுக்கிரன் நவக்கிரகத் தலம்-6/9. மாசிமகம் பெருவிழா. அப்பர் -பாடல் பெற்ற தலம். வெள்ளிக்கிழமை வெண்தாமரை மலர்- வழிபாடு சிறப்பு. நடராசர் சிலையில் சிவகாமி சிலாரூபமாக இருப்பது சிறப்பு
வரை படம்: விரிவாக்கு(enlarge)