ஊர்:ஆவுடையார்கோயில்+மு,.திருப்பெருந்துறை#
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஆத்மநாதர்
இறைவி: ஸ்ரீயோகாம்பிகை
தாயார்
உற்சவர்: ஸ்ரீமாணிக்கவாசகர்.
பிறசன்னதிகள்: ஸ்ரீபாலசுப்ரமண்யர், ஸ்ரீவெயிலுகந்த விநாயகர், மற்றும் 2விநாயகர்கள், ஸ்ரீமுத்துவிநாயகர், ஸ்ரீசொக்க விநாயகர், ஸ்ரீகுருந்தமூலசுவாமி, நடராசர் சன்னதி., ஸ்ரீமாணிக்கவாசகர்
7நிலைராஜகோபுரம்.
3பிரஹாரங்கள்
மரம்: குருந்த
தீர்-நிருத்தமாம்பொய்கை-12-அக்னி, ஆத்மநாதகூபம்-சிவ, தேவி, சிந்து, சதசிவ, மகேச, சிவகங்கை, நாராயண, பிரம்ம, 64கோடி, திருத்தொட்டி, வெள்ளாறு6சிறப்புகள்-1.வனம்- குருந்தவனம், 2.தலம்- திருப்பெருந்துறை, 3.தீர்த்தம்-நிருத்தமாம் பொய்கை, 4.புரம்- சிவபுரம், 5.மூர்த்தி- ஆத்மநாதர், 6.தொண்டர்-மாணிக்கவாசகர். நவகிரகங்கள் தூணில்
தேர்த்திருவிழா
6காலபூஜைகள்
தி.நே-0500-2100
#15082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது
அருளாகிய முக்திக் கரையில் ஏறுவதற்குத் துறையாக இருக்கும் தலம் திருப்பெருந்துறை. சுகுணபாண்டியன் காலத்தில் ஆன்மநாதசுவாமிக்கும், சிவயோகாம்பிகைக்கும் நித்திய பூசை நடத்தும் பொருட்டு காசியிலிருந்து 300 பிராமணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பொன்னாடை கொடுக்கும்போது ஒருவர் குறைய மன்னன் வருந்த ஈசன் அந்தன வடிவங் கொண்டு பொன்னாடைபெற்றார். முன்நூற்றொருவர் என்ற பெயர் உண்டாயிற்று. அந்த அந்தனர்களுக்கு முந்நூறு அக்ரஹாரம் ஏற்படுத்தி சர்வமானிய பத்திரம் கொடுத்து மதுரை சென்றான் மன்னன். அந்த அக்ரஹார அந்தனர் புதல்வருக்கு வேத அத்தியயனஞ் செய்ய சுவாமியை வேண்ட வயோதிகராக வந்து வேதமோதிக் கற்றுத்தந்தார்- சத்தநாதர் உபாத்தியார் எனப் பெயர் பெற்றார். சிறிது காலத்திற்குப்பின் லுண்டாக்கன் என்பவன் பிராமணர்களிடமிருந்த பத்திரங்களைப் பெற்று சிவபுரத்தை தனதாக்கிக் கொள்ள அவர்கள் தங்கள் ஆசிரியனுடன் கௌமார பாண்டியனிடம் முறையிட்டனர். சாட்சியும் இல்லை சாசனமும் இல்லை. லுண்டாக்கன் அனுபவபூர்வமாக 2 பனையளவு வெட்டினாலும் சிவபுரத்தில் நீரில்லை என்றான். அந்தணர்கள் சார்பாக ஆசிரியன் வெட்டுவாய் தோறும் வெட்ட வெட்ட நீர் வரும் என்றார். சிவபுரத்தில் அனைவரின் முன்னே லுண்டாக்கன் மண்வெட்டியால் பல இடத்தில் வெட்ட ஆசிரியரான சிவப்பிராமணர் நினைந்தருளியதால் 64 கோடி தீர்த்த நீர் எல்லா இடத்திலும் வந்து ஒன்றுபட்டு பரந்து ஓர் பெருந்துறையாய் நின்றதால் சிவப்புரம் பெருந்துறை ஆனது. விப்பிரர்கள் பொருட்டு வழக்காடியதால்-விப்பிரநாதர்.
அருவமாகவே எழுந்தருளியுள்ளார். தியானம் செய்பவரின் அகமுகப் பார்வை நந்தி. சுழுமுனை வழியே மேல் நோக்கிப் புருவ மத்திவரை செல்கின்ற தியானம் கொடிமரம். மார்பு-பலிபீடம். எல்லாம் ஞானமயம். மற்ற ஆலயங்கள் போல் கிழக்கு, மேற்கன்றி தென்திசை நோக்கி -குரு மூர்த்தம். பாணமில்லை-ஆவுடையார் மட்டும், திருவாதாவூரர் மன்னன் குதிரை வாங்க கொடுத்த 49கோடி பொன்னை கொண்டு கோவில் கட்டி சிறையில் அடைபட சிவன் நரிகளை பரிகளாக்கி தந்து அவரை விடுவிக்க-மறுநாள் குதிரைகள் காணாமற் போக- மீண்டும் துன்புறுத்த, ஈசனை வேண்ட- வைகையில் வெள்ளம்- வீட்டிற்கு ஒருவர் முறையில் வந்தி மூதாட்டிக்காக அவள் சமைத்த பிட்டினை கூலியாகப் பெற்று வைகை கரையை அடைக்காமல் உறங்க கோபம் கொண்ட மன்னன் பிரம்பாலடிக்க அனைவர் முதுகிலும் பிரம்படிபட, மன்னன் வேண்ட அருள்- திருவாதாவூரர்-மாணிக்கவாசகர் ஆனார்-திருவாசகம். லிங்கம்-அரூபம். பாதங்கள் மட்டும். நந்தியில்லை. மாணிக்கவாசகர் சொல்ல இறைவன் ஓலை சுவடியில் எழுதிய தலம். 2தூண்களில் 1000கால்கள், 1008சிவ இறைவன் இறைவி திருவடிகள், 27நட்சத்திரங்கள், நடனக் கலை முத்திரைகள், சப்தஸ்வர கல்தூண்கள், சிற்பக் கலையழகு நிறைந்த டுண்டு விநாயகர், கல் சங்கிலிகள், உடும்பும் குரங்கும்-சிறப்பு. கனக, நடன, தேவ, சத், சித், ஆனந்த என 6 சபைகள் தீபங்களால் அலங்கரிக்கப் படுவது சிறப்பு. 1000 கால் மண்டபத்தில் நரசிம்மர், காளி, ஊர்த்தவ தாண்டவர், பிட்சாடனர், வேலேந்திய முருகன், ரிஷபாந்தகர், சங்கரநாராயணர்,,அகோர வீரபத்திரர், அக்னி வீரபத்திரர், துவாரபலகர் சிற்பங்கள் சிறப்பு. தியாகராஜ மண்டப குதிரை வீரர்கள், கொடுங்கைகள் சிறப்பு. பஞ்சாட்சர மண்டபத்தில் அசுவநாதர், பாண்டிய மன்னன், மாணிக்கவாசகர், குறும்பர்கோன் சிற்பங்கள் சிறப்பு. தில்லை மண்டபத்தில் பதஞ்சலி, வியாக்ரபாதர் சிலைகள் சிறப்பு. ஆவுடையார்க்கு பின்புறம் 27 நட்சத்திர தீபங்கள், சூரிய, சந்திர அக்னி என 3 தீபங்கள். அந்தனர் வேடமிட்டு குழந்தைகளுக்கு வேதபாடம் கற்றுத் தந்து அப்பிள்ளைகள் வீட்டில் உண்ட புழுங்களரிசி, முளைக்கீரை, பாகற்காய் ஆகியனவே இன்றும் நிவேத்தியம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)