ஊர்:மன்னார்கோயில்#
மூலவர்: ஸ்ரீவேதநாராயணப்பெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி-3நிலை
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீவேதவல்லித்தாயார், ஸ்ரீபுவனவல்லித்தாயார்
உ: ஸ்ரீஅழகியமன்னார்-ராஜகோபாலசாமி-
பிறசன்னதிகள்: ஸ்ரீராசேந்திரவிண்ணகரத்தேவர், ஸ்ரீவிண்ணகரத்தெம்பெருமான்
5நி.ராஜகோபுரம்
2பிரகாரங்கள்.அஷ்டாங்க விமானம்.
மரம்:
தீர்:பொருணை(தாமிரபரணி),கடனா/கருனை
தி.நே-0700-1100,1700-2000
#-29-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி-04634 252874
பிருகு முனிக்கு-பரம்பதநாதர், வேதநாராயணர், அரங்கநாதர் என 3நிலைகளில் காட்சி. மார்கண்டேயர் அருள். திருமால் கோயில் கருவறையின் முன்னுள்ள வாசல்படி-குலசேகரன்படி-குலசேகரமன்னர் ஐக்யம்- குலசேகர ஆழ்வார் முக்தி. இவருக்கு தனி கொடிமரம்,சன்னதி.
வஞ்சிக்களத்தில் திடவரதன் என்ற மன்னன் திருமால்மேல் பக்தி கொண்டு அரசாண்டான். வெற்றிகள் எல்லாம் பெருமாளுக்கு சமர்ப்பித்தான். அனந்தபத்மநாபன் அருளாள் ஓர் மகன் பிறக்க குலசேகரன் எனப் பெயரிட்டு வளர்ந்தான். தென்மொழி வடமொழிகளில் பாண்டியத்துவம் பெற்றான். கவிபாடுவது, மல்யுத்தம் வில்யுத்தம் அனைத்திலும் தேர்ச்சி பெற்றார். அரசு வேலைகளில் சிக்கள்களைத் தீர்த்துவைத்தார். மன்னன் மகிழ்ந்து மகனிடம் சேரநாட்டு ஆட்சி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பெருமாளை சேவிப்பதில் ஈடுபாடு கொண்டான். நல்லாசி நட்ப்பதுகண்டு சோழனும் பாண்டியனும் படையெடுக்க அவர்களை வென்றார். பாண்டியன் மகளை மணந்தான்.ஓர் மகன் மகள் பிறந்தார்கள். மனைவி மக்களை மறந்து இராம நாமத்தை கேட்டு திருமால்மீது அதிதீத பக்தி கொண்டார். அரண்மனையில் வைணவ தொண்டர்களை உபசரித்து மகிழ்ந்தார். அரசனுக்கும் வைணவருக்கும் பகை ஏற்படுத்த இராம விக்ரகத்தை அலங்கரிக்கும் மாலையை மறைத்துவிட்டு அந்த பழியை வைணவர்கள் மீது போட்டனர். வைணவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள். அப்படியிருப்பின் நச்சு என்னை தீண்டட்டும் என பாம்பு இருக்கும் பாணைக்குள் கைவிட்டார். சிறிது நேரத்தில் பாம்பு வெளிவந்தது. மந்திரிகள் மீது சீற உண்மை அறிந்த மன்னன் உலக வாழ்வில் வெறுப்புகண்டு தல யாத்திரை தொடங்கினார். திருப்பதியில் உள்ள குலசேகரன் படி வணங்கும் முறை இவருக்காகத்தான் இன்றும் உள்ளது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)