ஊர்:சேவூர்,மாட்டூர், ரிஷபபுரி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவாலீசுவரர்(சு)
இறைவி: ஸ்ரீஅறம்வளார்த்தநாயகி ,ஸ்ரீதர்மசம்வர்த்தினி, ஸ்ரீஅருட்பெரும் செல்வி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன்,ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீமுருகன்-வள்ளி,தெய்வானை,,ஸ்ரீநடராஜர்-சிவகாமி..ஸ்ரீபாலதண்டாயுபாணி, ஸ்ரீசனீஸ்வரர். ஸ்ரீபஞ்ச லிங்கங்கள்
ஐந்து நிலை ராஜகோபுரம்.
மரம்-வன்னிமரம் தீர்-கிணறு, வாலிநதி
தி.நே.0530-1130,1630-1930
1000 ஆண்டுகள் பழமை. சேங்கன்- சே- காளைமாடு- நந்தி வழிபட்டது- சே- ஊர். 800ஆண்டுகள பழமையானது, வாலி வழி பட்டது, கருவரையில் லிங்கத்திற்குப் பின்னால் ஏழு சிவ லிங்கங்கள். பஞ்ச கவ்ய அபிஷேகம் சிறப்பு. நடராஜர் சிரசில் அக்னி. சோமாஸ்கந்த சொரூபம்-வாலீஸ்வரர்-முருகன் - அறம்வளர்த்தநாயகி.
தலவரலாறு- வாலி, சுக்ரீவன் இருவரும் சகோதரர்கள். கிஷ்கிந்தா பகுதியை வாலி ஆண்டபோது மாயாவி என்ற அசுரன் மக்களை துன்புருத்த அவனைக் கொல்ல வாலி தன் தம்பி சுரீவனுடன் சென்றான், மாயாவி ஓர் குகைக்குள் ஒளிந்து கொள்ள சுக்ரீவனை குகை வாயிலில் காவலுக்கு நிற்க வைத்துவிட்டு உள்ளே சென்று மாயாவியுடன் போர் புரிந்தான். குகையிலிருந்து ரத்தம் வெளிவர பயந்த சுக்ரீவன் வாலியைக் கொன்ற மாயாவி தன்னையும் கொன்று விடுவான் என அஞ்சி வாயிலை ஒரு பாறங்கல்லைக் கொண்டு மூடி விட்டுச் சென்றான். மாயாவியைக் கொன்ற வாலி குகை வாயில் அடைக்கப்பட்டிருப்பது கண்டு அதை தள்ளிவிட்டு வெளியில்வர அங்கு சுக்ரீவன் இல்லாதது கண்டு கோபமடைந்தான். அப்போது மாயாவியைக் கொன்ற பிரமஹத்தி தோஷம் பின் தொடர வசிஷ்டரிடம் ஆலோசனைக் கேட்டான். அப்போது அவர் இங்கிருந்து கானகம் வழி சென்று கடம்பவனத்தில் தெய்வத்தன்மை வாய்ந்த இடத்தில் புலியும் மானும் விளையாடும். அங்கே லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடு. உன் தோஷம் நீங்கும் என்றார். அதன் படி வாலி பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம்.-வாலீஸ்வரர். நாரதருடன் இங்கு வந்த வசிஷ்டர் வாலிநதி என்ற தீர்த்தத்தை உண்டாக்கி வழிபட்டார். வீர ராஜேந்திர சோழன் 11ம் நூற்றாண்டில் கல்கட்டுமானம் கட்டி வழிபாடு. கரிகால் சோழன் அம்மன் ஆலயம் கட்டினான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)