ஊர்: அகரம்,வருணபுரி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆதிமூலேஸ்வரர்-ருத்திரப்பந்தலின் கீழ்
இறைவி: ஸ்ரீ அமிர்தவல்லி-4கரங்கள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீசூரியன், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீநீலகண்டர், ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி தெய்வானை, ஸ்ரீ இடும்பன், ஸ்ரீகடம்பன்,
மூன்றுநிலை ராஜகோபுரம் மரம்:
தீர்: சாவர்ணி
தி.நே-0600-1200,1700-2030
தலவரலாறு: சுவேத நதி என்ற வெள்ளாற்றை யானை கடக்க முற்பட்ட போது முதலை அதன் காலை கவ்வ யானை ஆதிமூலமே என்று குரலெழுப்ப விஷ்ணு தன் கையிலிருந்த சக்கரத்தை பிரயோகிக்க் அது மறைந்துவிட்டது.. இதை மகேசனிடம் தெரிவிக்க அவர் சக்கரத்தை மீட்டு விஷ்ணுவிடம் கொடுத்தார். அந்த சக்கரத்தைக் கொண்டு யானையை மீட்ட விஷ்ணு சிவனிடம் ஆதி மூலேஸ்வரர் என இவ்வூரில் அருள்புரிய வேண்ட இறைவன் ஆதிமூலேஸ்வரர்.
காஸ்யப ரிஷி தவமிருந்தபோது கடும் மழையை பொழிந்து அவர் தவத்திற்கு இடையூரு செய்ததால் வருணா நீ கடலில் மறைவாய் என சாபம். ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடலிலிருந்து வருணன் இறைவனை வேண்ட சிவன் அருள் புரிந்ததால் வருணபுரி.
மந்தாகினி என்ற பெண் சாபத்தால் ஒளி குன்றிய சூரியனை காப்பாற்ற தேவர்களும் முனிவர்களும் வேண்டினர். சூரியனின் மகன் சாவர்ணி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட சூரியனுக்கு சாப விமோசனம் கிட்டியது. தீர்த்தம் சாவர்ணி எனப்பட்டது.
சித்ரகுப்தருக்கு பூஜை செய்து இரவு நடை சாத்தப்படுகின்றது. அர்த்த சாமத்தில் சித்ர குப்தர் பூஜை செய்வதாக ஐதீகம்.
சித்திரை முதல் வாரத்தில்சூரியனின் கிரணங்கள் லிங்கத்தின் மீது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)