ஊர்: கோபசந்திரம்(மலைமேல்):
மூலவர்: ஸ்ரீவெங்கடேஸ்வரசுவாமி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ ஸ்ரீ:வெங்கடேஸ்வரர்-ஸ்ரீதேவி,பூதேவி
பிறசன்னதிகள்: ஸ்ரீகருடாழ்வார்
மரம்:
தீர்:
தி.நே-0730-1230,1600-1930
மலைமேல் செல்ல சாலை உள்ளது. வனமாக இருந்த இந்தப் பகுதியில் பசுக்களுடன் வாழ்ந்துவந்த சகோதர்ர்கள் ஒருவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள மற்றவர் திருப்பதி சென்று ஆறு மாதத்திற்கு கைங்கரியம் செய்வது என்றும் பின்னர் அடுத்தவர் பார்த்துக்கொள்ள முன்னவர் திருப்பதி கைங்கரியம் செய்வது என்று முடிவுடன் வாழ்ந்து வந்தனர். காலச் சக்கரத்தில் அண்ணுக்கு திருப்பதி செல்ல முடியா நிலையில் வருந்தி பெருமாளை வேண்ட நீ இங்கு வரவேண்டாம் நான் அங்கேயே காட்சி கொடுப்பேன் என கனவில் வாக்கு. பின் பெருமாளை எங்கு தேடியும் கிடைக்காமல் இருக்க மறுபடியும் வேண்ட பசு உறுவில் உனக்கு நான் இருக்கும் இடம் சொல்வேன் என்று கன்வில் வாக்கு. பசுக்கூட்டத்திலிருந்து ஒரு பசு மலை உச்சிக்குச் சென்று ஓரிடத்தில் படுத்துக்கொள்ள அந்த இடத்தின் அருகில் திருநாமத்துடன் சுயம்பு மூர்த்தம் கண்டு ஊர்மக்களுக்குச் சொல்லி அனைவரும் ஒன்று சேர்ந்து பந்தலிட்டு வழிபாடு. கிருஷ்ண தேவராயர் காலத்தில் கோவில் கட்டப்பட்டது.
ஆந்திரா, கர்நாடகா எல்லைகளும் அருகிலிருப்பதால் விழாக்கள் நடக்கும்போது மூன்று மொழிகளிலும் துண்டு பிரச்சாரங்கள் ஒன்றாக அச்சிடப்படுகின்றது
வரை படம்: விரிவாக்கு(enlarge)