ஊர்:கோபிநாதமலை
மூலவர் ஸ்ரீகோபிநாதர்
இறைவன்: இறைவி:
தாயார்: உ: பிறசன்னதிகள்: ஸ்ரீகோப்பம்மாள்
மரம்:
தீர்:
தி.நே-0800-1700 விசேட நாட்களில் இரவு 8மணி வரை
400'உயரமலை. 600படிகள்.
500ஆண்டுகள் பழமை.
கால்நடைகளின் கண்கண்ட தெய்வம். சனிக்கிழமை சிறப்பு.
தலவரலாறு-பெல்லாரி தேசத்தின் மன்னன் மனைவி கோப்பம்மாள் மகன் கோபிநாதன்.. கடும் வறட்சியால் ஊர் வாடிய நிலையில் தங்களுடைய கால்நடைகள் இறந்து கொண்டிருக்க வாடிய மன்னனிடம் பாதயாத்திரையாகச் சென்ற அந்தனன் தன் பசியைப் போக்க வேண்டினான். அன்னம் அளித்து பசிதீற நீவிர் பாண்டிய நாடு சென்று வறட்சி நீங்கி வளமுடன் வாழ்க என வாழ்த்தினான். வல்லாளமன்னன் மறைய அவன் மனைவியும் மகளும் சில வேளையாட்களுடன் ஆநிரைகளை ஓட்டிக்கொண்டு பாண்டிய நாட்டு எல்லைப் பகுதியான ரெட்டியார் சாத்திரம் வந்து சொழிப்பாக இருந்த பகுதியில் வசித்தனர். படிப்படியாக் இங்கும் மழை குறைய வறட்சி ஏற்பட கோபிநாதன் மழைபெய்து வறட்சி நீங்கினால் தான் உயிரை மாய்த்துக் கொள்வதாக குலதெய்வத்திடாம் வேண்டினான். அன்றிலிருந்து மழை பெய்தது. தன் கோரிக்கை நிறைவேறியதால் கோபிநாதன் மலை உச்சிக்கு சென்று கீழே குதித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டான். மாடுகளும் மகனும் வராததால் கோப்பம்மாள் கஞ்சி கலயத்துடன் காட்டிற்குச் சென்று நிலை அறிந்தாள். அதிர்ச்சியுற்று அங்கேயே இறந்தாள்.
சில காலங்களுக்குப்பின் அப்பகுதிக்கு வந்த ஜமீந்தாரின் வண்டி அங்கேயே நின்றுவிட சுற்றிலும் பார்க்க அங்கிருந்த மாடுகள் மான்களாத் தெரிந்தது. அருகில் செல்ல மறைந்தது.பிரசனம் பார்த்து முன்பு நடந்தவற்றை அறிந்து கோபிநாதன் என்ற பெயரில் சிலைவடித்து கோவில் கட்டினார். கோவில் கட்டிய சில நாட்களில் சங்கு சக்கரத்துடன் ஒரு குழந்தை பிறந்திருக்கின்றது என கனவில் அறிந்து அந்தக் குழந்தையை கண்டுபிடித்து அதையே கோபிநாதருக்கு பூஜை செய்ய வைத்தார் ஜமீந்தார். அந்தக் குழந்தையின் பரம்பரையே இன்றும் பூஜைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)