ஊர்:முப்பந்தல்.அ-23
மூலவர்: ஸ்ரீஇசக்கியம்மன்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
கள்ளிச் செடியின் நிழலில் இயக்கி அம்மன் இருந்து அருள். பனகுடியில் இருந்த பக்தை தீராத வயிற்ருவலியால் அவதிப்பட்டு தாளமுடியாமல் அம்மா என அலற அற்றிரவு அவள் கனவில் தோன்றி அவள் வயிற்றை இதமாக நீவிக்கொடுத்து கள்ளிச் செடியின் நிழலில் இருக்கும் எனக்கு ஓர் கொட்டகை போடக்கூடாதா எனக்கேட்டு மறைய ,கண் விழித்த பெண் தன் வயிற்ருவலி முற்றிலும் நீங்கியது கண்டு ஆனந்தப்பட்டு அம்மன் சொல்லியது நினைவிற்கு வர அந்த இடத்தைச் சுத்தம்செய்து சிறிய கொட்டகைப் போட்டாள். காலப்போக்கில் கோவில் வளர்ந்து நல்ல நிலையடைந்தது. சேர், சோழ, பாண்டியர்கள் தங்கல் பிரச்சனைகளுக்கு இங்கு பந்தல் அமைத்து அம்மனை வழிபட்டு தீர்வு கண்டமையால் மூன்று பந்தல் முப்பந்தல் என்றானது.
பழவூர் சிவாலயத்தின் அர்ச்சகர் கணிகையுடன் காதல் வயப்பட்டு இருக்க அவனிடமுள்ள பொருள்கள் இழந்ததும் அவர்களைப் பிரிக்க நினைத்த கணிகையர் கூட்டத்தால் தன் இழந்த பொருளை மீண்டும் பெற தன் காதலியை கள்ளிக்காட்டு மரத்தடியில் கொன்றான். அவள் அண்ணன் தங்கையைத் தேடி வந்து அவள் நிலைக் கண்டு பதறி அவனும் உயிர்விட்டான். தப்பிய அர்ச்சகன் பாம்பு தீண்டி இறந்தான். மறுபிறவியில் அண்ணணும் தங்கையும் நீலன், நீலி எனப்பிறந்து யட்சகர்களாய் வளர அதைக் கண்டுபிடித்து விரட்ட சுள்ளிக்காடு வந்து நீலன் வேம்பாகவும் அதன் நிழலில் நீலியும் தங்கினர். நீலியின் முற்பிறவி கணவன் வணிகனாகப் பிறந்து விதிவயத்தால் இப்பக்கம்வர நீலி மாயக் குழந்தையுடன் பின்னால் வந்து தன் கண்வன் ஏமாற்றிச் செல்வதாகக் ஊராரிடம்கூறி கணவனை தன்னுடன் இருக்கச் செய்து அவனைக் கொன்றாள். அவளைக் கண்ட அவ்வையார் உன் எண்ணம் நிறைவேறியது நீ இங்கேயே இரு என்றார். இந்த நிகழ்வை அறிந்த சிவன் பார்வதியிடம் நீலிக்கு அருள் புரியச் சொல்ல தேவி தன் வீரசக்தியை நீலிக்கு அளிக்க, நீலி இயக்கியாக. இசக்கி அம்மனாக ஊரைக் காத்து நின்று அருள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)