ஊர்:திருமணஞ்சேரி, அக்னி ஆற்றின் தென்கரை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசுகந்தபரிமளேசுவரர்
இறைவி: ஸ்ரீபிரகன்நாயகி, பெரியநாயகி-4கரங்கள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: படித்துறை விநாயகர், நவகிரகங்கள்
மரம்: வன்னி தற்போது மதுரையில்
தீர்: அக்னி ஆறு, குளம்- மருத்துவ குணம் நிறைந்தது.(கிணறு-தற்போது மதுரையில்)
தி.நே-0700-1200,1600-2000
காவிரிப்பூம் பட்டணத்தில் வசித்த வந்த நகரத்தார் குலத்து வணிகன் ஒருவன் மிக நல்லவன். அவன் மனைவியும் நல்லவள். குழந்தை பாக்கியம் இல்லை. தானதருமங்கள் தொடர்ந்து செய்து வந்தான். அவன் மனைவி கருவுற்று ஓர் பெண் குழந்தை ஈன்றாள். வணிகனின் தங்கை மகன் ஏற்கெனவே திருமணமாகி இருந்தவன். இருப்பினும் உறவு விட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக தன் பெண்ணை தன் தங்கை மகனுக்கே திருமணம் செய்ய முடிவு செய்திருந்தான். திடிரென்று வணிகன் இறந்தான். அதிர்ச்சியில் அவன் மனைவியும் இறந்தாள். மாமன் இறந்த செய்தியறிந்து மதுரையிலிருந்து மருமகன் புறப்பட்டு வந்தான். மாமன், அவர்மகளை தனக்கு திருமணம் செய்ய விருப்பமுடன் இருந்ததை உறவினர்கள் வாயிலாக அறிந்தான். தன் ஊருக்கு அழைத்துச் சென்று உறவினர் முன்னிலையில் திருமணம் செய்ய எண்ணி தன்னுடன் வந்திருந்த அனைவரையும் முன்னால் அனுப்பிவிட்டு அப்பெண்னைக் கூட்டிக் கொண்டு பின்னால் நடந்து சென்று கொண்டிருந்தனர். இரவு நேரமானதால் இருவரும் வழியில் இருந்த ஓர் வில்வ மரத்தடியில் லிங்கமும் கிணறு இருக்க கண்டு அதில் குளித்துவிட்டு லிங்கத்தை வணங்கி அருகே தலைவைத்து படுத்தான். ஓர் விஷப்பாம்பு அவனைத் தீண்ட அவன் அங்கேயே இறந்தான். காலை உண்மையறிந்த பெண் திருமணம் நடக்கவில்லையாதலால் அவனைத் தொடாமல் தனக்கிருந்த ஒரே உறவும் இறந்தது கண்டு அலறினாள். துடித்தாள். நடுக்காட்டில் ஓர் பெண்ணின் அலறலைக் கேட்ட சிவன் ஓர் முதியவராகக் காட்சிதந்து அவளுக்கு ஆறுதல் தந்து அக்கிணற்று நீரை அவன்மேல் தெளிக்க விஷம் நீங்கி அவன் எழுந்தான். அப்பெரியவர் இருவரையும் அங்கேயே திருமணம் செய்து கொள்ளச் சொல்ல மருமகன் தன் உறவினர்கள் இல்லாமல் மணம் செய்யத் தயங்கினான். அப்போது ஈசன்தோன்றி வன்னி மரம், கிணற்று நீர் சாட்சியாகத் திருமணம் செய்வித்ததனால் மனம் மகிழ்ந்து வன்னிமர பரிமளேஸ்வரரை வணங்கி புறப்பட்டனர். இறைவன் முன்னின்று திருமணம் நடைபெற்றதால் திருமணஞ்சேரி.
இந்தப் பெண் வந்தவேளை மூத்தவள் இரு முறை கர்ப்பம் தரித்து இரண்டு குழந்தைக்கும் இளையவள் ஒரு குழந்தைக்கும் தாய் ஆனார்கள். ஒர் நாள் குழந்தைகள் சண்டை பெரியவர் சண்டையாகமாற மூத்தவள் இளையவளை சாட்சி இல்லாமல் அநாதையாகத் திருமணம் என்று சொல்கின்றாய் என வசைபாடி பரிகசித்தாள். இளையவள் மனம் நொந்தாள். ஊர் பெரியவர்கள் முன்னிலையில் விசாரனை. திருமணத்திற்கு சாட்சி உண்டா என்றனர். அவள் நடந்ததைக் கூற யாரும் நம்பாமல் பரிகசிக்க இளையவள் பரிமளேஸ்வரை நினைந்து வருந்தினாள். அன்று இரவு கனவில் ஈசன் தோன்றி உன் திருமணத்திற்கு சாட்சி வரும் எனக்கூறி மதுரை மீனாட்சி கோவில் சுற்றில் வன்னிமரமும் கிணறும் இருக்கும் எனக்கூறி மறைந்தார். இதை ஊர் பெரியவர்களிடம் சொல்ல அனைவரும் வந்து பார்த்து அவள் சொல்வது உண்மை என ஆசீர்வதித்துச் சென்றனர். 12-ம் நூற்றாண்டு கோவில். அம்மன் இடக்கரம் பின்னப்பட்டதால் வேறு சிலை செய்ய அதுவும் பின்னப்பட செய்வது அறியாமல் இருக்க இருக்கும் நிலையில் இரு சிலைகளையும் பிரதிஷ்டை செய்ய அருள். இரு அம்மன்கள். திருமணத்தடைகள் நீங்கும். மணம்-சுகந்தம். திருமணநாதர் என்ற ஈசன் பெயர் சுகந்த பரிமளேஸ்வரர் என்றானது. சடையவர்மன் திருப்பணி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)