ஊர்:திருப்புறம்பயம்.தி.த-100+மு புன்னைவனம்,
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசாட்சிநாதர், ஸ்ரீசாஷீஸ்வரர், ஸ்ரீபுன்னைவனநாதர்
இறைவி: ஸ்ரீகரும்பன்னசொல்லி, ஸ்ரீஇஷுவாணி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீமுருகன்- ஒருமுகம்-4கரங்கள் ஸ்ரீசட்டைநாதர்,ஸ்ரீபிரத்யட்சநாதர். ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்
த.வி. ஸ்ரீபிரளயம்காத்தவிநாயகர், . 5நிலைராஜகோபுரம்-2பிரகாரங்கள்
தீர்-பிரம,ஏழுகடல்கிணறு
மரம்-புன்னை
தி.நே-0700-1200,1700-2000
#18.07.2023-குருஸ்ரீ பயணித்தது.
பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தமையால் திருபறம்பயம். நால்வர், சனகர், அகத்தியர்,
புலச்தியர், சனந்தனர், விசுவாமித்திரர் வழிபட்டது. செட்டிபெண்ணுக்கு சாட்சி. தடைபட்ட திருமணம் புத்திரபாக்கியம், சுகப் பிரசவம்-பிரார்த்தனை. குகாம்பிகை சன்னதி, ஆறுமுகனை நந்தி இடையில் அரவணைத்தது சிறப்பு. விநாயகர் ஓம்காரத்தை பிரயோகித்து 7கடல்களின் பெருக்கையும் கிணற்றில் அடக்கியதலம். சட்டைநாதர் சன்னதி சற்று உயரே அமைந்திருப்பது வழக்கம். ஆதித்த சோழன் கருங்கல் திருப்பணி. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். திருப்புகழ் வைப்புதலம்.
காவிரிப்பூம் பட்டணத்தில் வசித்த வந்த நகரத்தார் குலத்து வணிகன் ஒருவன் மிக நல்லவன். அவன் மனைவியும் நல்லவள். குழந்தை பாக்கியம் இல்லை. தானதருமங்கள் தொடர்ந்து செய்து வந்தான். அவன் மனைவி கருவுற்று ஓர் பெண் குழந்தை ஈன்றாள். வணிகனின் தங்கை மகன் ஏற்கெனவே திருமணமாகி இருந்தவன். இருப்பினும் உறவு விட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக தன் பெண்ணை தன் தங்கை மகனுக்கே திருமணம் செய்ய முடிவு செய்திருந்தான். திடிரென்று வணிகன் இறந்தான். அதிர்ச்சியில் அவன் மனைவியும் இறந்தாள். மாமன் இறந்த செய்தியறிந்து மதுரையிலிருந்து மருமகன் புறப்பட்டு வந்தான். மாமன், அவர் மகளை தனக்கு திருமணம் செய்ய விருப்பமுடன் இருந்ததை உறவினர்கள் வாயிலாக அறிந்தான். தன் ஊருக்கு அழைத்துச் சென்று உறவினர் முன்னிலையில் திருமணம் செய்ய எண்ணி தன்னுடன் வந்திருந்த அனைவரையும் முன்னால் அனுப்பிவிட்டு அப்பெண்னைக் கூட்டிக் கொண்டு பின்னால் நடந்து சென்று கொண்டிருந்தனர். இரவு நேரமானதால் இருவரும் வழியில் இருந்த ஓர் வில்வ மரத்தடியில் லிங்கமும் கிணறு இருக்க கண்டு அதில் குளித்துவிட்டு லிங்கத்தை வணங்கி அருகே தலைவைத்து படுத்தான். ஓர் விஷப்பாம்பு அவனைத் தீண்ட அவன் அங்கேயே இறந்தான். காலை உண்மையறிந்த பெண் திருமணம் நடக்கவில்லையாதலால் அவனைத் தொடாமல் தனக்கிருந்த ஒரே உறவும் இறந்தது கண்டு அலறினாள். துடித்தாள். நடுக்காட்டில் ஓர் பெண்ணின் அலறலைக் கேட்ட சிவன் ஓர் முதியவராகக் காட்சிதந்து அவளுக்கு ஆறுதல் தந்து அக்கிணற்று நீரை அவன்மேல் தெளிக்க விஷம் நீங்கி அவன் எழுந்தான். அப்பெரியவர் இருவரையும் அங்கேயே திருமணம் செய்து கொள்ளச் சொல்ல மருமகன் தன் உறவினர்கள் இல்லாமல் மணம் செய்யத் தயங்கினான். அப்போது ஈசன் தோன்றி வன்னி மரம், கிணற்று நீர் சாட்சியாகத் திருமணம் செய்வித்ததனால் மனம் மகிழ்ந்து வன்னிமர பரிமளேஸ்வரரை வணங்கி புறப்பட்டனர். இறைவன் முன்னின்று திருமணம் நடைபெற்றதால் திருமணஞ்சேரி..
இந்தப் பெண் வந்தவேளை மூத்தவள் இரு முறை கர்ப்பம் தரித்து இரண்டு குழந்தைக்கும் இளையவள் ஒரு குழந்தைக்கும் தாய் ஆனார்கள். ஒர் நாள் குழந்தைகள் சண்டை பெரியவர் சண்டையாகமாற மூத்தவள் இளையவளை சாட்சி இல்லாமல் அநாதையாகத் திருமணம் செய்து கொண்டு இன்று சொல்கின்றாய் என வசைபாடி பரிகசித்தாள். இளையவள் மனம் நொந்தாள். ஊர் பெரியவர்கள் முன்னிலையில் விசாரனை. திருமணத்திற்கு சாட்சி உண்டா என்றனர். அவள் நடந்ததைக் கூற யாரும் நம்பாமல் பரிகசிக்க இளையவள் பரிமளேஸ்வரை நினைந்து வருந்தினாள். அன்று இரவு கனவில் ஈசன் தோன்றி உன் திருமணத்திற்கு சாட்சி வரும் எனக்கூறி மதுரை மீனாட்சி கோவில் சுற்றில் வன்னிமரமும் கிணறும் இருக்கும் எனக்கூறி மறைந்தார். அதற்கு முன் மதுரைகோவிலில் வன்னிமரமும் கிணறு கிடையாது. இதை ஊர் பெரியவர்களிடம் சொல்ல அனைவரும் வந்து பார்த்து அவள் சொல்வது உண்மை என ஆசீர்வதித்துச் சென்றனர். திருமணஞ்சேரி. (புதுக்கோட்டை-கரம்பக்குடி அருகில்) திருப்புறம்பியம்- சாட்சிநாதருக்கும் இதே நிகழ்வு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)