ஊர்: சிவாயம்+மு
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசிவாயபுரீசுவரர்
இறைவி: ஸ்ரீபெரியநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன், ஸ்ரீபைரவர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசித்திவிநாயகர்,ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீகாசி விஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீசோழபுரீசர், ஸ்ரீநடராஜர்-சிவகாமி, தூணில் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர்.
5நிலைராஜகோபுரம்+3நிலை உளகோபுரம்
தீர்-காவிரி,பிரம்ம நான்குகாலபூஜை மரம்-மகிழம் தி.நே-0630-1200,1630-1900
1000 ஆண்டுகள் பழமை. 3-ம் ராஜேந்திரன், 3-ம் குலோத்துங்கன் திருப்பணிகள். ஆரம்பத்தில் ஐயர்மலை அடர்ந்த காடாக இருந்ததால் சிவாயத்திலிருந்துதான் அர்சகர்களும் பூஜைப் பொருள்களும் ஐயர்மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிற்பக்கலை மிகுந்த 100க்கால் மண்டபம். நடராஜர்-தெற்கு நோக்கி- உயிர்களுக்கு யமனால் வரும் பிரச்சனைகளைத் தீர்ப்பவர்- சிவபுரீஸ்வரர். கௌசிகன் நன்னெறி தவறாது சிவ வழிபாட்டில் ஈடுபட்டவன். அவன் மனைவி நேர் எதிர் குணம் கொண்டவள். அடியவர்களையும் சிவ வழிபாட்டையும் கேலி செய்பவள். அவர்களுடைய மகனும் தாயயைப் போல் இருந்தான். தந்தைவழி நடக்காமல் வட்டிக்கு பணம் கொடுத்து மிகவும் கராறாக வசூலித்து வந்தான். நடத்தைகெட்டு மகாபாவியாக இருந்தான். கௌசிக முனிவருக்கு இப்படி ஒரு மகன் ஏன் என்பதை சனகாதி முனிவர்கள் சூது முனிவரிடம் கேட்டனர். காஷ்மீரத்தில் பிறந்த கௌசிகன் சிவராத்திரியன்று கதைக்கேட்க சென்று கொண்டிருக்கும்போது இருட்டில் ஓர் விலை மாது மீது மோதிக் கொண்டான். கதைக் கேட்கும்போதுகூட அதையே நினைத்திருந்தான். அடுத்த சில நாட்களிலும் அப்படியிருக்க அதன் காரணத்தை அறிந்த அவள் மனைவி தாசி வீட்டிற்குச் சென்று அவளிடம் மன்றாடி வீட்டிற்கு கூட்டிவர கௌசிகன் ஆனந்தப்பட்டான். பின்னர்தான் தான் செய்த பாவம் அவனுக்குப் புரிந்தது. அதை கழுவ பலதலங்களுக்குச் சென்று வழிபட்டான். அதன் பலனாக கௌசிகன் இப்பிறவியில் சிவ வழிபாட்டை தொடர்கின்றார். ஆனால் அவர் செய்த பாவம் அவருக்கு மகனாகவும் மனைவியாகவும் வாய்ந்துள்ளது. என்றார். இப்படித் தகாத முறையில் பணம் சம்பாதித்து பணத்தை வட்டிக்கு கொடுத்துவந்தான். கொத்தனார் ஒருவன் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காததால் அவன் வேலை செய்யும் இடத்தில் பணத்தைக் கொடுத்துவிட்டு வேலை செய் என அவன் செய்துகொண்டிருந்த வேலையை கொத்தனார் நிறுத்த, கோவில் வேலையை நிறுத்தாதே என என்ன சமாதானம் சொல்லியும் விடாமல், நான் உன் வேலையைச் செய்கின்றேன் நீ போய் பணம் கொண்டுவா என்றான். அவன் வரும்வரை கல் எடுத்துவைத்து வேலை செய்தான். அன்றைய சம்பளம் வட்டிக்கு சரியானது. அந்திக் காலத்தில் யமதூதுவர்கள் இருவரையும் பிடித்திழுத்துச் செல்ல பூதகணங்கள் தடுத்து அவர்கள் இருவரும் கோவில் கட்ட உதவி செய்துள்ளார்கள் என யமதூதர்களைத் தடுத்து சொர்கத்திற்கு அழைத்துச் சென்றனர். திருப்புகழ் வைப்புதலம். துஷ்டன் மக்ஷனை வதம் செய்ததால் தொடர்ந்த பிரமஹத்தி தோஷம் நீங்க துர்க்கை வழிபட்டது. ஆல்ய முதல் கோபுரக் கதவுகள் இராமாயண கதவுகள் எனப்படும் பிரமாண்டமான கதவுகள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)