ஊர்:திருத்துருத்தி.குத்தாலம்#:
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஓம்காளிசுவரர்
இறைவி: ஸ்ரீஆனந்தவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகாளி வாயு மூலையில்
முகப்பு-3நி.உள்கோபுரம்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
#09062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
காளி பூஜித்த லிங்கம். பரதமுனிவர் - சுபத்திரை மகள் அரும்பண்ணமுலைநாயகி உத்தவேதீசர் திருமணம் காரணமாக இங்கு நிறைய கோவில்கள். பரத முனிவரிடம் கையிலை நாதர் தங்களின் மகளை மணம்புரிய இங்கு வருகைதர உள்ளார் என நந்தியம்பெருமான் மூலம் தக்வல் அறிந்த முனிவர் தூதுவரிடம் ஓர் விண்ணப்பம் செய்தார். அதாவது கபாலம், மயிர் கற்றைகள் நீக்கி வனப்புடைய ஆபரணங்கள் அணிந்து ஓர் மணமகன் போன்று வரவேண்டும் என்பதே அது. அதற்கு உடன்பட்ட ஈசன் தன் திருமணம் பற்றிய செய்தியை தொண்டர்கள் மூலம் எல்லோருக்கும் அறிவிக்கச் செய்தார். வேதங்களும் சூர்ய சந்திரர்களும், அக்னி, வருணன், காளி தேவர்கள் அனைவரும் வர ஈசனின் அழகிய வடிவம் கண்ட தேவர்கள் தாங்கள் பெண்ணாக மாற ஆசை கொண்டனர். ஈசன் அவ்வளவு வனப்புடன் ஆடை அணிகலன்களுடன் மிக அழகாக தோன்றினார். திருமணம் முடிந்தபின் சிலர் இங்கேயே தங்க காளியும் விஸ்வகர்மாவை வரவழைத்து தடாகம் ஏற்படுத்தி ஆலயம் அமைத்து லிங்கம் ஒன்றை நிறுவி வழிபட ஆரம்பித்தாள். அங்கு ஈசன் தோன்றி நடனம் ஆட காளியும் நடனம் ஆட தேவர்கள் பூமாரி பொழிந்தனர். காளி ஈசனுக்கு இனையாக ஆடும் திறன் படைத்தவள். காளியின் விருபத்திற்கு இசைந்த ஈசன் ஓம் என அருளி மறைந்தார். அன்று முதல் ஓம் காளீஸ்வரர். காளி வாயு மூலையில் அமர்ந்து அடியார்க்கு அருள். ஏழு முனிவர்கள் வழிபட்டு முக்தி யடைந்தனர். தொழில் வளர்ச்சி, திருமணத்தடை நீங்க, எதிரிகள் தொல்லை நீங்க வழிபாடு. கார்த்திகை ஞாயிறு விழா. வைகாசி இறுதியில் கல்யாண உற்சவம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)