ஊர்:திருமாந்துறை#.தி.த.112+மு.ஆம்ரவனம், பிரம்மானந்தபுரம், மிருகண்டீசுவரபுரம்.:
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஆம்ரவனேஸ்வரர், ஸ்ரீசுத்தரத்னேஸ்வரர், ஸ்ரீமிருகண்டீசுவரர், ஸ்ரீஆதிரத்னேஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅழகம்மை, ஸ்ரீபாலாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன்ஒருமுகம்-4கரங்கள்-வள்ளி,தெய்வானை.பாலதண்டபாணி, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீபைரவர்
3நிலைராஜகோபுரம்.
மரம்-மா.
தீர்-காயத்ரிநதி,
தி.நே.0600-1130,1600-1930
#25092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தென்கரையில் உள்ளது வைப்புத் தலம். இந்த வடகரைத்தலமே பாடல் பெற்றது. பிரம்மா, சூரியன், சந்திரன், இந்திரன், மிருகண்டு முனி வழிபாடு. திருமுடியைக் கண்டதாகப் பொய்சொன்ன பிரம்மா தீர்த்தம் உருவாக்கி வழிபட்டுத் தவம்- சாபம் நீங்கப் பெற்றார். கௌதம முனிவரால் சாப்ம் பெற்ற இந்திரன் தவம் செய்து பாபம் நீங்கப் பெற்றான். தன் கணவனின் வெம்மையைத் தாங்கிக் கொள்ள ஆற்றலை வேண்டி சமுக்யாதேவி சிவ வழிபாடு. மிருகண்டு முனி தவமிருந்து மார்கண்டேயரைப் பெற்றதும் பின் மார்கண்டேயன் பதினாறு அடைந்ததும் மரண பயமின்றி வாழ முதலில் தவம் மேற்கொண்ட தலம். தாயை இழந்த மான் குட்டிக்காக தயாக மாறிய தலம். கிரகங்கள் சூரியனைப் பார்த்தபடி. பங்குனிமாதம் முதல் 3நாள் சூரிய ஒளி இறைவன்மீது. மூலநட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம். பாஸ்கரத் தலம். ஆலமரத்து வேர்மண் பிரசாதம். ஞானசம்பந்தர்- பாடல் பெற்ற தலம்.
இந்த மாமரவனத்தில் தவம் மேற்கொண்ட முனிவர் சிவனைப் பழித்த காரணத்தினால் மானாகப் பிறந்தார். அசுரர்களாக முற்பிறவியில் வாழ்ந்து இப்பிறவியில் மான்களாக பிறந்தவர்களுக்கு குட்டியாகப் பிறந்தார். இறைவன் வேடராக வந்து இந்த தம்பதி மான்களுக்கு அம்பால் ஒரு செவ்வாய்கிழமை சாபவிமோசனம் அளித்தார். தனியாக்கப்பட்ட குட்டி மான் பசியிலும் பயத்திலும் வேதனையுற்றதைக் கண்ட சிவபார்வதி அதற்கு பாலூட்டி சீராட்டினார். சிவன் பார்வதி தரிசனம் கிட்டியதால் சாப விமோசனம் பெற்று மீண்டும் ரிஷியானார். செவ்வாய்க்கிழமை- சதுர்த்தி திதி சிறப்பு பூஜைகள். பாலாம்பிகையை பாலாபிஷேகம்செய்து வழிபட பாலரிஷ்டதோஷம் நீங்கும்
வரை படம்: விரிவாக்கு(enlarge)