ஊர்: நன்னிமங்கலம், சென்னி வாய்க்கால் கோவில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசுந்தரேஸ்வரர் மரகத பச்சை-5' உயரம்
இறைவி:ஸ்ரீ மீனாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசுப்ரமண்யன்- வள்ளி, தெய்வானை, ஸ்ரீசனிபகவான், ஸ்ரீபைரவர், ஸ்ரீசெவி சாய்த்த விநாயகர், ஸ்ரீலட்சுமி நாராயணாப் பெருமாள், ஸ்ரீவரதராஜர்-ஸ்ரீதேவி, பூதேவி, 2 சண்டிகேஸ்வரர்கள், 2பிரஹாரங்கள் ஆகமம்: சிவ ஆகமம்
மரம்: சந்தனம் மரம்:, பொன் வில்வம்
தீர்:
தி.நே-0900-1000,1700-1800
1200 ஆண்டுகள் பழமை. அம்மன், அம்மையப்பன் இருவரையும் ஒரு சேர தரிசிக்கலாம். மதிற்சுவர் அருகே பெரிய புற்று உள்ளது. புற்றிலிருந்து நாகம் நீர்வடியும் கோமுக வழியாக உள்ளே வந்து இரவில் தங்கும். காலையில் அர்ச்சகர் உரத்த குரலில் பாசுரம் பாடும்போது வந்த வழி சென்று புற்றுக்கு போகிறது. பிரம்மனுக்கு 5முகங்கள் இருந்தபோது வழிபட சிவன் 5முகங்களுடன் காட்சி. பிரம்மா 5 தலைகளால்- சென்னி வணங்கி மோட்சம் பெற்றதால் சென்னி சிவம். எவருக்கும் கிட்டாத அபூர்வ ஸ்வர்ண வில்வ சரத்தைக் குபேரனிடம் கொடுக்க குபேரன் தன் குமாரர்களான மணிக்ரீவன், நளகூபனிடம் அதைத் தந்து இந்த பொன் வில்வ சரம் யோக தவ ஜப சித்திகளைப் பெற்றவர்கள் தவிர வேறு எவர் கரங்களிலும் நிலைக்காது. கண்களிலும் தென் படாது. பூலோகத்தில் ஏற்ற தலத்தில் வைத்து வழிபட்டு வருக எனக்கூறினார். இருவரும் அண்னாமலையை அடைய அசரீரி மூலம் வழிகாட்ட திருத்தவத்துறை- லால்குடியில் சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி எழுந்தபோது வேறொரு தலத்தில் அவர்கள் இருப்பதை உணர்ந்தனர். அவர்களது கரத்திலிருந்த பொன் வில்வ சரம் மறைய திடுக்கிட்டவர்களுக்கு கோவில் கதவு தானாக திறந்தது. கருவறையில் கரும் பச்சை வண்ணத்தில் மரகதமாய் ஜொலித்த சுயம்பு திருமேனியில் தாங்கள் கொண்டு வந்த பொன் வில்வ சரம் பேரொளியுடன் இருக்க கண்டு பரவசமடைந்தனர். 'ஓம் நமசிவாய' சொல்லச் சொல்ல ஒளிகூடியது. மிகுந்த மனத்திருப்தியுடன் தேவலோகம் சென்றனர். அது ஓர் பௌர்ணமி நாள்.-பௌர்ணமி வழிபாடு சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: