ஊர்: மயிலரங்கம்:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமயூரநாதர்
இறைவி:ஸ்ரீ மங்களாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
விமரிசன் என்பவன் வேடன். அந்த ஊரில் உள்ள வேடர்களுக்கெல்லாம் தலைவன். வேடர்குலத்திற்கு மன்னன். எல்லோரிடமும் நட்பு கொண்டிருந்தான். சிறந்த சிவபக்தன். சிவஆலயத்தில் வழிபடுவான். அவன் எப்போதும் சிவராத்திரி அன்று மட்டும் விரதம் மேற்கொள்வான். வேட்டையாடமாட்டான். ஆழ்ந்த தியானத்தில் இருப்பான். உணவு உட்கொள்ளாமல் பஞ்சாட்சாரத்தை மனதில் ஓதுவான். உறங்காமலிருந்துவிட்டு மாலையானதும் கோவிலுக்குச் சென்று சிவராத்திரியன்று நடக்கும் பூஜைகளை தரிசனம் செய்வான். சத்சங்கங்களைக் கேட்பான். நான்கு காலமும் சிவனை வழிபடுவான். பின் என்னல் இயன்றவரை உன்னை நினைத்து வழிபட்டேன் எனக் கூறி குளித்து காலை உணவு உட்கொள்வான். மீண்டும் அடுத்த சிவராத்திரிவரை காத்திருப்பன். அவனது மனைவி உட்பட யாரும் இதுபற்றி அவனிடம் கேட்க தயங்கினார்கள். ஒருநாள் இது பற்றி கேட்டுவிடுவது என அவன் மனைவி குமுதவதி சிவபக்தனான நீங்கள் சிவராத்திரி விரதம் மட்டும் தொடர்ந்து கடைபிடிப்பதன் அர்த்தம் என்ன எனக் கேட்டாள். விமரிசன் அது என் பூர்வ ஜென்மத்திற்கு தொடர்பானது என்றான். அந்தப் புண்ணியத்தால் எனக்கு பழைய புதிய பிறவிகளும் தெரிந்து கொள்ளமுடியும் என்றான். முன் ஜென்மத்தில் தான் நாயாகப் பிறவி எடுத்துள்ளேன் என்றான். அப்படியென்றால் எப்படி வேடர்குல மன்னராக பிறவி எடுத்துள்ளீர்கள் என்றாள். அதுதான் இரகசியம் என சிறிதுநேரம் கண்மூடி அமர்ந்திருந்தான்.
பம்பை என்றழைக்கப்பட்ட அந்த தெருவில் அலைந்து திரிந்து நாய் ஒன்று உணவு உண்டு இருந்தது. ஒருநாள் எங்கு அலைந்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. பசியால் வாடியது. கண்கள் இருண்டது. எதிரில் கோவில் பலிபீடத்தில் அர்ச்சகர் இலைபோட்டு படையல் வைப்பதைப் பார்த்த நாய் அதை யாரும் கவனிக்காத வேளை என நினைத்து உண்ணச் சொன்றதைப் பார்த்தவர்கள் கல்லை எடுத்து இட்டனர். கற்கள் மேல் படவும் நாய் தன்னை மறந்து ஓடியது. அப்போது ஒருவர் அம்பு எய்த அது நாயைத் தாக்கியது. தைத்த அம்பால் இரத்தம் ஒழுக அதிக தூரம் ஓட முடியாமல் கோவிலின் வாயிலில் விழுந்தது. அப்போது அர்ச்சகர் சுவாமிக்கு தீப ஆரதனை செய்து கொண்டிருக்க அதைப் பார்த்தபடியே இறந்தது அந்த நாய். அன்று சிவராத்திரி, மேலும் ஈசனின் தீப ஆராதனையைப் பார்த்துக் கொண்டு இறந்ததால் இப்பிறவி என்றான். ஆச்சரியத்துடன் இதைக் கேட்ட குமுதவதி தான் முற்பிறவியில் என்னவாக இருந்தேன் என்று கேட்டாள். நீ புறாவாக இருந்தாய். உன் குஞ்சுகளுக்கு இரை கொண்டுவரும்போது கழுகு உன்னைத்தாக்க நீ விழுந்த இடம் கோவில் அன்று சிவராத்திரி ஆராதனை பார்த்துக் கொண்டே நீயும் இறந்ததால் நீ என் மனைவி ஆனாய் என்றான். அம்பிகை மயில் வடிவில் வணங்கியத்தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)