ஊர்:மன்னார்குடி-கடைவீதி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅண்ணாமலைநாதர்
இறைவி: ஸ்ரீஉண்ணாமலை, ஸ்ரீஅபிதகுஜாம்பாள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசனீஸ்வரர்,
2பிரகாரங்கள்
மரம்:
தீர்: சக்கர தீர்த்தம் தி.நே-0900-1200,1730-1930
வல்லாள மகராஜன் காசியிலிருந்து தல யாத்திரையாகப் புறப்பட்டு இராமேஸ்வரம் செல்லும் வழியில் மதிய உணவு வேளை வந்தது. உணவு உண்ணும் முன் சிவபூஜை செய்து பின் உண்பது வழக்கம். ஆனால் அருகில் ஏதும் கோவில்லை. எனவே மணலால் ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டு இராமேஸ்வரம் சென்று வழிபட்டு திரும்பி வந்தார். அப்பொதும் தான் வழிபட்ட மணல் லிங்கம் மனித நடமாட்டம் இல்லாத வனத்தில் அருட்பிரகாசத்துடன் பூக்கள் எல்லாம் பொலிவு மாறாமல் அப்படியே இருக்க கண்டு வியந்து இந்த இடத்திலேயே ஒரு கோவில் கட்டினான். சோழர் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டது. இந்தக் கோவில் திருப்பணி செய்த மன்னனின் மந்திரி மகளின் ஜாதகத்தின்படி அவளது 18 வயதில் அவள் கணவன் இறந்துவிடுவான் என்றிருக்க மந்திரி மிகக் கவலை கொண்டு அம்பாளிடம் வேண்டினார். உன் மகளின் உயிர் பறிக்க எமன் வரும் வேளையை முதல் நாளே உன் மகளுக்கு தெரியப்படுத்தப்படும். அப்போது என்னை எண்ணி திருநீறு அணிந்து சிவ நமத்தை உச்சரித்து வந்தால் நல்லதே நடக்கும் என்று அசரீரி ஒலித்தது. அப்படியே செய்ய மகளின் மாங்கல்யம் பிழைத்தது. அந்த மகிழ்ச்சியில் அம்பிகையின் முன் பெரிய மண்டபம் கட்டினான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)