ஊர்:திக்குறிச்சி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமகாதேவர்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசப்தகணபதி, ஸ்ரீஇசக்கியம்மன், ஸ்ரீபத்ரகாளியம்மன், ஸ்ரீஷேத்ரபாலர், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீயோக கந்தர்வயஷராக்ஷா, ஸ்ரீவீரராகவன்
மரம்: ச்ரசமரம்
தீர்: தாமிரபரணி
தி.நே-0500-1200,1700-2000
வரலாறு- பாசுபதம் வேண்டி அர்ச்சுனன் தவமிருக்க அதை தடுக்க துரியோதனன் முகாசூரன் என்ற அரக்கனை அனுப்ப, பன்றி ரூபம் கொண்டு அர்ஜுனனைத் தாக்கவர, அர்ஜுனனைக் காக்க சிவபெருமான் வேடனாக உருவெடுத்து வந்து பன்றியின் மேல் அம்பு எய்ய அதே சமயம் அர்ஜுனனும் அம்பு எய்த பன்றி கீழே விழ அது யாருடைய வீரம் என இருவருக்கும் கருத்து மோதல் வந்து ஒருவரை ஒருவர் கட்டிப் புரண்டனர். தான் பலமிழந்து கீழே விழுந்ததும் அருகில் இருந்த பூக்களை அங்கிருந்த இறைவன் மேல் போட்டு தனக்கு பலம் பெருக வழிபட அப்பூக்கள் வேடன் தலையில் இருப்பது கண்டு வந்திருப்பது ஈசனே என்றுணர்ந்து மன்னிக்க வேண்டினான், ஈசன் மகிழ்ந்து அருள் புரிந்து ஆசி வழங்கி பாசுபதத்தை வழங்கினார். அப்போது ஈசன் மிகவும் உக்ரமாக இருந்ததால் அருகில் அமர்ந்து தியானம் செய்ய தாமிரபரணி அங்கு அவரைத் தொட்டுக் கொண்டு ஓடி அவரை குளிர்ச்சியடையச் செய்தது. இப்பொழுதுள்ள மகாதேவர் ஆலயம் பிற்காலத்தில் கட்டப்பட்டது.
நந்தியில்லாசிவன். சிவாலயஓட்டம்-2/12.
வரை படம்: விரிவாக்கு(enlarge)