ஊர்:ஆனந்ததாண்டவபுரம்.பாரிஜாதவனம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபஞ்சவடீஸ்வரர்(சு)
இறைவி:1.ஸ்ரீகல்யாணசுந்தரி.2.ஸ்ரீபிரஹன்நாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஜெயதுர்க்கை
3நிலைராஜகோபுரம்
தீர்-சிவகங்கை/அமிர்தபிந்து.
மரம்-பாரிஜாதம்.
தி.நே-0600-1200,1600-2100
பரத்வாஜருக்கு கல்யாணக்காட்சி. பதஞ்சலி முனிக்காக ஆனந்த தாண்டவமாடிய தலம். பார்வதி தனக்கு பிடித்த இடம் என ஒர் மாளிகை கட்ட அப்போது அங்குவந்த சிவன், இயக்கங்களைக் கட்டுப்படுத்த 9கோள்கள். ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவர் அதிபதி. இந்த இடத்திற்கு சனி அதிபதி. அவரின் அனுமதியின்றி மாளிகை கட்டுவது தன் கொளகையின்படி தவறு. எனவே சனியின் அனுமதி பெற்று வருகிறேன் என்றார். பார்வதியும் உடன் வருகிறேன் எனச் சொல்ல சிவன் நீ இங்கேயே இரு. சனியின் அனுமதி கிடைக்க வில்லையெனில் உடுக்கையில் ஒலி எழுப்புகின்றேன். நீ மாளிகையை இடித்து விடு எனக் கூறிச் சென்றார். சனியிடம் மளிகை கட்டுவது பற்றிச் சொல்லியதும் இது தங்கள் இடம். இங்கு தங்குவதற்கு என் அனுமதி தேவையில்லை. இருப்பினும் என் அனுமதி கேட்டு வந்தது சந்தோஷம். எனினும் என் பார்வைபட்டால் தவறு நடக்கும் என்பதால் தங்கள் நடனத்தை பார்த்ததில்லை என வருந்தினான். உடன் சிவன் நீ இப்போதே என் நடனத்தைக் காண்பாய் எனக்கூறி ஆனந்த நடனமாட நடன அசைவில் உடுக்கை அதிர அந்த ஒலியைக் கேட்டதும் பார்வதி தான் கட்டிய மாளிகையை இடித்து விட ஆணையிட்டாள். அங்குவந்த சிவன் நடந்ததைக் கூற பார்வதி தன் செயலுக்கு வருந்தினாள். அப்போது எம்பெருமான் இந்த இயற்கையே என்னை மிகவும் கவர்ந்தது. இங்கு செயற்கையாக மாளிகை எதற்கு. பனிமலையே பிடித்திருப்பதால் இங்கேயே இருக்கலாம் என்றுகூறி கயிலையை தன் இருப்பிடமாகக் கொண்டார். ஆனந்த முனிவர் சிறந்த சிவபக்தர். யோகசக்தி மிக்கவர். தினமும் தனுஷ்கோடியில் குளித்து பஞ்சாட்சரம் ஜபித்து தில்லையில் தரிசனம் பின் மகேந்திரமலையில் தரிசனம். ஒருநாள் சிதப்பர தரிசனம் கிடைக்கவில்லை. உடன் உயிரை மாய்க்க முயல ஈசன் ஆனந்த தாண்டவ காட்சி- ஆனந்ததாண்டவபுரம். கருடன் வான்வழி செல்லும்போது அமிர்தம் சிந்தியதால் தீர்த்தம் புனிதம். திருமண, குழந்தை வரத்திற்கு வழிபாடுகள். பௌர்ணமி சிறப்பு பூஜை. பஞ்சவடி- முடிகற்றையால் ஆன நூல். தன் மகளின் திருமணத்திற்கு மாப்பிள்ளை வருகைக்காக காத்திருந்தபோது வந்த சிவனடியாரை வ்ணங்கச் சொல்ல அப்பெண்ணின் கூந்தல் நீளமானதாக இருப்பதால் பஞ்சவடிக்கு உதவும் எனச் சொல்ல மணமகள் கோலத்திலிருந்த மகளின் சடை முடியை அறுத்துக்கொடுக்க ஈசன் காட்சி தந்து அருள் பெற்ற மானக் கஞ்சார நாயனார்-புண்ணியவதி வாழ்ந்த பதி. 29/63- மானகாஞ்சாற நாயனார். சகலதோய்நோய்கள் தீரும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)