ஊர்:தேக்கம்பட்டி#பவானியாற்றின்கரையில்,நெல்லித்துறை,நெல்லூர்,நெல்லிமலை,நெல்லூர்க்காடு,பாஞ்சாலிக்காடு,நெல்லூர்பட்டினம், ஆரவல்லிக்கோட்டை
மூலவர்: ஸ்ரீவனபத்ரகாளி நான்கு கரங்கள்.
இறைவன்: ஸ்ரீநெல்லீஸ்வரர்
இறைவி: ஸ்ரீகாந்திமதி அம்மன்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், எதிரில் வெட்டவெளியில் ஸ்ரீபாகாசூரன். ஸ்ரீபீமன், ஸ்ரீமுனியப்பன் கோஷ்டத்தில் வைஷ்ணவி, வராஹி, சாமுண்டி, துர்க்கை.
மரம்: தொரத்திமரம்
தீர்: பவானி நதி நீர்
தி.நே-0700-1200,1700-2000
#02102002-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
தொலைபேசி-04254-222286
ஆரவல்லி, சூரவல்லி, வீரவல்லி உள்ளிட்ட மந்திர தந்திர கலையில் நிபுணர்களான சகோதரிகள் எழுவரைவெல்ல வந்த பீமன் சகோதரிகளின் சூன்யத்தை வெல்ல முடியாமல் தோற்று ஓட, பாண்டவர்கள் தங்கை சங்கவதி மகன் அல்லிமுத்து வனபத்ர காளியை வழிபட்டு வாளையும் சிறிது விபுதியையும் பெற்று சகோதரிகளைப் போரிட்டு வென்றான். அவனிடம் பணிவதுபோல் நடித்த சகோதரிகள் தங்கள் மகள் பல்வரிசையை அவனுக்கு மண முடிக்கச் சொல்ல பாண்டவர்களிடம் வெற்றிச் செய்தியைச் சொல்லி பின் உங்கள் மகளை மணப்பேன் என்று சொல்லி மணப்பெண்ணுடன் புறப்பட்டான். வழியில் மங்கையின்மேல் உள்ள மயக்கத்தால் திருநீறு பூசாமல் இருந்தவன் மாயையால் மயக்கம்போட மணப்பெண் தன் அம்மா கொடுத்த எழுமிச்சையை மயக்கம் தீர்க்கும் என கொடுக்க அது மாந்தீரகத்தன்மை கொண்டதால் அதை அருந்தைய வுடன் அல்லிமுத்து சூழ்ச்சியால் மாண்டான். விபரம் அறிந்த அபிமன்யு காளியின் பூதகண உதவியோடு போரிட்டு அறுவரை கொன்று இந்திரன், அன்னை உதவியுடன் அல்லிமுத்துவை உயிர்பித்தான். மணமகள் பல்வரிசை(வாலம்மா)க்கும் அல்லிமுத்துவுக்கும் திருமணம் நடைபெற்றது.
காளியின் அருளால் பீமன் மக்களை துன்புறுத்திவந்த பாகாசூரனை உணவு வண்டி கொண்டு சென்று போரிட்டு கொன்ற இடம். இறக்கும் தருவாயில் அன்னையிடம் வரம் பெற்று காவல் தெய்வமாக பாகாசூரன். பில்லி, சூன்யம் நீங்கவழிபாடு. ஆடி திருவிழா.-தீமிதி திருவிழா
வரை படம்: விரிவாக்கு(enlarge)