ஊர்:திருஅன்னியூர்.தி.த-76+மு+அ-37. பொன்னூர். லிகுசாரண்யம், பாஸ்கரசேத்திரம், பானுசேத்திரம். தமனியப்பதி.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆபத்சகாயேசுவரர், ஸ்ரீலிகுசாரண்யேஸ்வரர், ஸ்ரீஅக்னீஸ்வரர், ஸ்ரீபாண்டவேசுவரர், ஸ்ரீரதீசுவரர்.
இறைவி: ஸ்ரீபிருகந்நாயகி, ஸ்ரீபெரியநாயகி-4கரங்கள்
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஆதிமூலலிங்கம். ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை., ஸ்ரீநர்த்தன விநாயகர், ஸ்ரீஆதி தட்சிணாமூர்த்தி, ஸ்ரீகாமாட்சி, ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீநாகர், ஸ்ரீசூரியன், ஸ்ரீபைரவர்.
நிலைராஜகோபுரம்
3 கால வழிபாடு.
தீர்-வருண,அக்னி,காமசரஸ்,சூரியபுஷ்கரணி.
மரம்-எலுமிச்சை.
தி.நே-0700-0900,1700-1900
வருணன், அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர் வழி பட்டது.
தன் மகளை இழிவு படுத்தி சூரியனின் கையை வெட்டினான் மயன். வருந்திய மனைவி தன் தந்தையிடம் இதற்கு பரிகாரம் கேட்க திரு அன்னியூர் ஆபத்சகாயேஸ்வரரை வழிபடச் சொல்ல தன் கணவருடன் இங்குவந்து திர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட, தன் கரத்தினை திரும்ப பெற்றார் சூரியன். அதனால் பங்குனி 26-30 தேதிகளில் இன்றும் சூரியன் இறைவனை வழிபாடு-பாஸ்கரத்தலம்.
சிவபெருமானை நோக்கி இந்திரனும், பிரம்மாவும் செய்த யாகத்தில் யாக குண்டத்தில் இருந்த உணவு ருசியாக இருந்ததால் அளவுக்கு மீறி அக்னி யாக குண்டத்தின் உணவை உண்ட அக்னிபகவானுக்கு நோய் பற்றி உடல் மெலிய அவன் மனைவி ஸ்வாகாதேவி தேவகுருவிடம் ஆலோசனை பெற்று இங்கு வந்து தீர்த்தக் குளத்தில் நீராடி வழிபடஇத் தலத்து இறைவன் தலமரம் எலுமிச்சை மரத்தடியில் எழுந்தருளி (விகுசாரண்யேஸ்வரர்) அக்னி பகவானுக்கு அருளபுரிந்ததால்-அக்னீஸ்வரர்,
பாண்டவருக்கு காட்சி கொடுத்தால் பாண்டவேஸ்வரர், ரதிக்கு கருணை புரிந்ததால் ரதீஸ்வரர் என அழைக்கப் படுகின்றார்.
கார்த்திகை-ஞாயிறு நீராடல் பாவங்கள் நீங்கப் பெறும். தன் மகளை சூரியன் இழிவு படுத்தியதால் மயன் மருமகனின் கையை வெட்ட தேவகுரு ஆலோசனைப்படி நீராடி வழிபாடு. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)