ஊர்:நாகர்கோவில்#
மூலவர்:நாகராஜர்-5தலைகள்
இறைவன்: ஸ்ரீசிவன்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅனந்த கிருஷ்னன், சுவரில் ஸ்ரீபார்சுவநாதர், ஸ்ரீயஷினி பத்மாவதி, ஸ்ரீமகாவீரர், ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீமுருகன்,ஸ்ரீ பாலமுருகன்.
மரம்:
தீர்-குளம்.
தி.நே-0500-1100,1630-2000
#-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
கன்னியாகுமரிக்கும் நாகர் கோவிலுக்கும் இடையே உள்ள மகேந்திரகிரி மலையில் பரம்பரியமாக வாழ்ந்த நாகர்கள் கட்டிய நாகராஜருக்கு என தனிக்கோயில். புல்லறுக்க வந்த பெண் தன் அரிவாளிலிருந்து ரத்தம்வரக் கண்டு ஊர்மக்கள் பார்த்தபோது ஒர் ஐந்து தலை நாகத்தின்மேல் அரிவாள் பட்டு காயத்துடன் இருந்த பாம்பு பின்னர் அங்கிருந்து மறைந்து விட்டது. அந்த இடத்தில் ஓலைக்குடிசையில் நாகர் சிலை வைத்து வணங்கப்பட்டது. களக்காட்டு மன்னர் நாகரை வேண்டி தன் பெரு நோய் நீங்கியதால் இங்கு வழிபட்டு கோவிலை புதுப்பித்தார். கருவறையை கல்லால் திருப்பணி செய்திட விரும்பியவன் கனவில் தோன்றி தான் ஓலை குடிசையில் இருக்கவே விரும்புவதாக தெரிவிக்க இன்றுவரை ஓலை குடிசையில் அருள். தண்ணீர் ஊற்றிலிருந்து எடுக்கப்படும் புற்று மணல்-பிரசாதம்- ஆறுமாதம் கருமை, ஆறுமாதம் வெண்மை. சைவம், வைணவம், சமணம், பவுத்தம் என 4 சமயங்களுக்கும் பொது. விஷம் தீண்டாப் பதி. சர்ப்பதோஷம் நீங்கி குழந்தை வேண்டி 11ஆயில்ய நட்சத்திர நாளில் விரத வழிபாடு. ஞாயிற்றுக் கிழமை நாகராஜருக்கு பால் புனிதம். கொடிமரத்தில் கருடன் இல்லை. சர்பத்திற்கு எதிரி கருடன். கூர்மம் தோழமை. எனவே கூர்மம் பிரதிஷ்டை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)