ஊர்:திருப்பாலத்துறை.தி.த-136.குடமுருட்டியாற்றின்கரைபாலைவனம்,அரசவனம், புன்னாகவனம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபாலைவனேஸ்வரர்,ஸ்ரீபாலைவனநாதர்
இறைவி: ஸ்ரீதவளவெண்ணகையாள்,ஸ்ரீதவளாம்பாள்,ஸ்ரீதவளாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவசிஷ்டர், ஸ்ரீமகாலட்சுமி,ஸ்ரீபார்த்திபன்,ஸ்ரீமலையத்துவசன்வழிபட்டலிங்கங்கள்
70’உயர 5நி.ராஜகோபுரம்+45’உயர 3 நி.உள்கோபுரம்
தீர்-வசிஷ்ட,இந்திர,எம.
மரம்-பாலை
4காலவழிபாடு.
தி.நே-0700-1230,1630-2030
#17.07.2023-குருஸ்ரீ பயணித்தது.
கிருத யுகத்தில் சிவன் பற்று இல்லாமல் இருக்கவே மன்மதன் மலர் அம்பு எய்ய தவம் கலைந்த சிவன் அவனை கண்களால் எரிக்க, தேவர்கள் விருப்பப்படி பார்வதியை மணந்தார். அப்போது சாம்பலான மன்மத துகள்களைச் சேர்த்து உயிர்கொடுத்தார் பிள்ளையார். அவன் பண்டாசூரன் என்ற பெயரோடு தேவர்களுக்கு துன்பம் தரலானான். தேவர்கள் சிவனிடம் கூற அவர் தேவியிடம் தெரிவிக்கச் சொன்னார். உமை அவர்களை இங்கு வந்து வேள்வி செய்யக் கூறினார். அந்த வேள்வியில் திரிபுரை என்ற உருவில் தோன்றி பாண்டாசூரனைக் கொன்றாள். வேள்விக்குண்டம் மிகவும் வெப்பமாய் இருக்க ஈசனை வேண்ட வீரபத்திரர் தோன்றி தன் சடையில் இருந்த கங்கையை அவிழ்த்துவிட அங்கு ஓர் திருக்குளம் உருவாயிற்று. அந்த இடமே பல முனிவர்களுக்கு வசிப்பிடமாக ஆனதால் பிரும்மவனம் எனப் பெயர்பெற்றது.
திரேதா யுகத்தில் பிரம்மனின் மகன் வசிஷ்டர் கங்கை கரையில் பல காலம் தவம் செய்து பயனில்லையாதலால் இந்த பிரும்ம வனக் குளக்கரையில் காவிரி ஆற்று மணலால் சிவ லிங்கம் நிறுவி 3000 முனிவர்களுடன் பூஜை செய்தார். சிவன் காட்சி -வசிஷ்டருக்கு பிரும்ம ரிஷி பட்டம் அளித்தார். விஸ்வகர்மாவின் உதவியால் உமையின் திருவுருவை நிறுவி பூஜித்தனர். உமை மகிழ்ந்தாள் . அதனால் குளிர் நிலவு வீசி குளுமை உண்டானது. அம்பாளுக்கு தவள வெண்ணகை மங்கை எனப் பெயர் சூட்டினர். காவிரி மணலால் உருவாக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கம் மெல்ல இறுகியது..
அர்ச்சுனன் வழிபட்டு வில்வித்தையின் நுட்பங்களை அறிந்து பதாள உலகம் சென்று உலூபியை மணந்த தலம். தருகாவனத்து முனிவர்கள் வேள்வி செய்து புலியை ஏவ இறைவன் தோலை உரித்து உடுத்திய தலம். திருமால், பிரமன், வசிட்டர், தேவர்கள் வழிபட்டது.அப்பர் -பாடல் பெற்ற தலம்.36'உயரம், 84'சுற்றளவு உடைய நெற்களஞ்சியம் சிறப்பு. திருமணப் பிரார்த்தனைத் தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)