ஊர்: பழநி ஆயக்குடி/ஆவினன்குடி
மூலவர்:ஸ்ரீஇடும்பன்
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபாலமுருகன் இடும்பனுக்கு காட்சி தந்த கோலத்தில், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீநவகிரகங்கள்
மரம்: கடம்பமரம்
தீர்: இடும்பதிர்த்தம்
தி.நே-0600-1200,1600-2100
அகத்தியர் அலோசனைப்படி அவர் சீடர் இடும்பனும் இடும்பியும் பூர்ச்சினை சென்று அம்மலைகளைத் தூக்க சிவனை வேண்டினர். அப்போது பிரம்ம தண்டமும் அஷ்ட திக் நாகங்களும் அவன் முன் தோன்ற நகங்களை கயிறாகத் திரித்து மலைகளைக் கட்டி பிரும தண்டத்தின் இருபக்கமும் பிணைத்து அரோகரா எனமுழங்கி காவடியைத் தூக்கிக் கொண்டு தென் திசை நோக்கி நடந்தான். அங்கு அரச குமரனாக வந்த முருகன் இடுபனை திருவாவினன் குடிக்கு வந்து இளைபாறிச் செல்லுமாறு சொன்னார். அவ்வாறே காவடியை இறக்கி வைத்து விட்டு இளைப்பாறிய இடும்பன் மீண்டும் காவடியைத் தூக்க முடியவில்லை. பார்த்த போது மலையின்மீது ஒரு சிறுவன் கோவணத்துடன் இருப்பதைப் பார்த்து அவனை கீழ் இறங்கச் சொன்னன். அவன் மறுக்கவே அவனை அடிக்கச் சென்று பிரம் தண்டத்தில் மோதி மூர்ச்சையானான்.அங்கு வந்த அகத்தியரும் இடும்பியும் அச்சிறுவன் முருகன் என அறிந்து அவனை மன்னிக்க வேண்டினர். முருகன் அம்மலைகள் அங்கேய இருக்கட்டும் நீ இங்கேயே இருந்து அடியவர்களை கவனித்துக் கொள் என்றார். உன்னைப்போல் காவடி சுமந்து வந்து உன்னை வணங்கி பின் என்னை வழிபடட்டும் என்றார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரை படம்: விரிவாக்கு(enlarge)