ஊர்:ஞாயிறு#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபுஷ்பரதஈஸ்வரர்
இறைவி: ஸ்ரீசொர்ணாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகமல்விநாயகர்,ஸ்ரீமுருகன், ஸ்ரீகாலபைரவர்,ஸ்ரீநடராஜர்-சிவகாமி
3நிலைராஜகோபுரம்.
மரம்-திருவோடு:
தீர்:
தி.நே-0700-1200,1600-2000
#19022007-குருஸ்ரீ பகோரா பயணித்தது
பிரம்மா சாபத்தால் நோய் வாய்பட்ட சூரியன் வழி பட்டது.
1000 ஆண்டுகள் பழமை. சுந்தரர் மணந்த சங்கிலிநாச்சியார் அவதாரத்தலம். கன்வமகரிஷி முக்தி பெற்ற தலம். லிங்கத்தின்மேல் கத்தி பட்ட தழும்பு.
சித்திரை முதல்7நட்கள் சூரிய ஒளி- பாஸ்கரத்தலம்.
தீராப்பினி, பார்வைக் குறைபாடு, களத்திர தோஷம், புத்திரதோஷம் நீங்கும் தலம்.
தலவரலாறு:சோழமன்னன் நெல்லுர் வரை படையெடுத்து வெற்றி பெற்று திரும்பும்போது சோழவரத்தில் முகாமிட்டான். காலைசிவபூஜை செய்ய மலரைத்தேடி வந்தபோது இங்கு குளத்தில் செந்தாமரை மலர் ஒன்று அழகாக கண்ணுக்குத் தெரிய அதைப் பறிக்க முயன்று முடியாமல் தன் வாளை எடுத்துவீச அது பட்ட இடத்தில் இரத்தம் வந்து பேரொளி தெரிய அதை பர்த்த மன்னன் கண்கள் பறிபோயின. மயக்கமடைந்தான். மன்னன் கத்தி உடைந்து சிதறிய இடம் -கத்திவாக்கம், கைப்பிடி விழுந்த இடம் கண்டிகை. மன்னன் மார்பு கீழே படும்படி வீழ்ந்த இடம் மார்பெடு. குதிரை விழுந்த இடம் குதிரைப் பள்ளம். மயக்கம் தீர்ந்து எழுந்த மன்னனுக்கு காட்சி கொடுத்து அங்கு கோவில் எழுப்பச் சொன்னார். அதன்படி சோழமன்னன் கட்டிய கோவில் .மலர் வழியாக் ஈசன் வெளிப்பட்டதால் புஷ்பரதேஷ்வர்- பூத்தேராண்டார். மன்னன் கண் பார்வை மீண்டதால் வழிபட்டால் கண் நோய் தீரும்.
தன்னை விட்டுப் பிரிந்த சாயாதேவியை மீண்டும் அடைய சூரியன் திருவண்னாமலையை கிரிவலம் வர அப்போது தோன்றிய ஜோதி நகர அதைத் தொடர்ந்து வந்த சூரியன் அச்ஜோதி இங்கு லிங்கத்தின்மேல் விழ சூரியன் தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டான் சூரியன் நீராடிய தீர்த்தம் சூர்ய தீர்த்தம்.
பஞ்ச பாஸ்கரத்தலங்களில் ஒன்று (மற்றவை-திருச்சிறுகுடி,திருமங்கலக்குடி,திருப்பரிதி நியமம், தலைஞாயிறு)
வரை படம்: விரிவாக்கு(enlarge)