ஊர்: பரமக்குடி
மூலவர்: ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ: ஸ்ரீகருப்பண்ணசாமி , ஸ்ரீபலிநாயகர்
பிறசன்னதிகள்: ஸ்ரீகருப்பண்ணசாமி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஆதிமுத்தாரம்மன், ஸ்ரீநாகர்கள், ஸ்ரீ பைரவ்ர், ஸ்ரீஆஞ்சநேயர்,
ஐந்துநிலை ராஜகோபுரம் மரம்: கடம்பமரம்
தீர்: வைகை ஆறு
வெள்ளித்தேர் தி.நே-0600-1200,1700-2100
வரலாறு- சோழமன்னனுக்கு காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து அபூர்வமான முத்துக்கள் கிடைக்க அதை வணிகச் சங்கத் தலைவனிடம் கொடுத்து மாலையாகக் கட்டச் சொல்ல அம்முத்துக்கள் முடக்க முத்துக்களாக இருந்ததால் அதில் துளையிடுவதில் உள்ள சிரம்த்தை அறிந்து கவலை கொண்டான். வணிகணின் மகள் தந்தையின் கவலையை அறிந்து அம்மணிகளைப் பெற்று ஒரு நூலில் சர்க்கரை தடவி நேராக வைத்து வரிசையாக முத்துக்களை அதன்மேல் அடுக்கிவைக்க அவள் எதிர்பார்த்தபடி எறும்புகள் வந்து மொய்த்து முத்துகளை துளைத்து விட்டன. பின்னர் அம்மாலைகளைக் கோர்த்து தந்தையுடம் கொடுக்க மன்னன் மகிழ்ந்து இதை சிறப்பாகச் செய்தது அவ்வணிகனின் மகள் என்பதை அறிந்து அவளை மணக்க விருப்பம் கொண்டான். ஆனால் அதற்கு உடன்படாத அப்பெண் ஒரு சூழலில் தீக்குளித்து இறந்தாள். இதனால் வெகுண்ட அவ்வணிகர்கள் இனி இம்மன்னன் இருக்கும் நாட்டில் இருக்கக்கூடது என முடிவு எடுத்து அருகில் உள்ள பாண்டிய நாடு சென்றனர். அங்கு பிரம்மபுரி என்றழைக்கப்பட்ட பரமக்குடியில் அப்பெண்ணின் சாம்பலை வைத்து ஓரு முத்தால பரமேஸ்வரி கோவில் கட்டினர்,
பங்குனி மதம் பத்துநாள் தேர்த்திருவிழா
வரை படம்: விரிவாக்கு(enlarge)