ஊர்:பேரையூர்,பேரேஸ்வரம்,செண்பகவணம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநாகநாதர்(சு)
இறைவி:ஸ்ரீ பிரகதாம்பாள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீரிஷபாரூடர், சுயம்புலிங்கம் 3நிலைராஜகோபுரம் தீர்-சிவகங்கை-குளம்,நாக,சுவேதநதி(கங்கை) மரம்-பனை
தி.நே-0700-1200,1700-2000
சக்திவாய்ந்த சர்ப்பதோஷ பரிகாரத்தலம். எங்கும் நாகர்கள்- நாகலோகத்தினுள் செல்லும் உணர்வு. சண்டேஸ்வர நாயனார் சிவ பக்திக்கு இடையூறு செய்த தன் தந்தை எச்சதத்தனை வெட்டிய பாவம் நீங்க வழிபட்டது. பிரம்மன், சூரியன், இந்திரன் வழிபாடு.ஆதிசேஷன் சிவனை வழிபட்ட தலம். பால் அபிஷேகம் செவ்வாய், வெள்ளி சிறப்பு பூஜைகள். குறும்ப நாயானார் சிவண்டியார்களுக்கு சேவை புரிந்து வந்தார். சுந்தரமூர்த்தி நாயானார் சேரமான் பெருமானுடன் வடகயிலாயம் செல்வதை ஞானத்தால் உணர்ந்து சுந்தரர் இல்லா இடத்தில் வாழ்வு வேண்டாம் என வேண்டி அருள் பெற்றார். 52/63-குறும்ப நாயானார். கோவில் நிர்வாகத்திடம் ஒருநாள் முன்பு சொல்லி நாகசிலையை சுனையில் வைத்து மறுநாள் நீராடி சிலை பிரதிஷ்டை வழிபாடு மிகச்சிறப்பு.
சுயாம்பு மனு வம்சத்தின் சுவேதகேது மன்னன் கோவில்களுக்கு தல யாத்திரையாக காசி சென்றான். கங்கையில் நீராடி கங்கையை வழிபட காட்சி கொடுத்தவளிடம் தினமும் இதுபோல் கங்கையில் நீராடி சிவபெருமானை வழி பட பேரையூருக்கு வர வேண்டுகோள் விட கங்கை பெண் உரு கொண்டு சுவேதகேது தோளில் ஏறி அமர்ந்துகொண்டு வந்தவள் வழியில் காவிரியில் கலந்துவிட்டாள். இங்குவந்து சிவனிடம் நடந்ததைக் சொல்லி வருத்தப்பட சிவன் சுவேத நதி என கங்கை இங்கு ஓடும் என அருள் புரிந்தார்.
நாகநாதர் எதிரே உள்ள புண்ணிய புஷ்கரணியில் திருமாலும் பிரம்மாவும் நீராடி நாகநாதரை வழிபட்டனர். அதில் தெற்கில் உள்ள புலத்தின் வழி நாககன்னிகைகள் நாகராஜனை அழைத்துவர நாகநதரை வழிபட்டான். சலேந்திரன் சிவதீட்சை பெற்று சிவன் வழிபாட்டில் தீவிரமாக இருப்பவன். ஒர் நாள் வழியில் நாக்கன்னிகை தோன்ற அவளைப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் சபலம் தோன்ற நின்றவன் பின் சுதாரித்துக் கொண்டு தான் படைக்க இருந்த கனிகளில் வண்டு இருந்ததைக் கவனியாமல் பூஜை செய்ததால் சிவன் கோபம் கொள்ள சலேந்திரன் மன்னிக்க வேண்டினான். மன்னித்த ஈசன் நாக கன்னிகைமேல் சபலம் கொண்டதால் அங்கு குமுதனாகப் பிறந்து அந்த கன்னிகையை மணந்து வாழ் என அருள்புரிந்தார்.
நாகலோகத்திலிருந்து புலத்தின் வழிவரும் ஏழு நாக கன்னிகைகளில் சூலினி சிவன் மேல் அதிக பக்தி கொண்டவள். ஈசன் சூலினியிடம் சலேந்திரன் என்பவன் குமுதனாகப் பிறந்து அங்கு மன்னாக இருக்கின்றான் அவனை தாம் அழைத்ததாக கூறி அழைத்து வரச் சொன்னார். தான் சொன்னால் மன்னர் வருவாரா என சந்தேகம் கொள்ள ஈசன் நந்தி தேவரை உடன் அனுப்பி வைத்தார். தகவல் அறிந்ததும் மிக்க மகிழ்வு கொண்டு குமுதன் பிலத்தின் வழி இங்கு வந்து ஈசனை வழிபட்டு மீண்டும் தான் நாகலோகம் செல்ல அணுமதித்து அங்கு தான் செய்யும் சிவ வழிபாட்டில் ஈசன் கலந்துகொண்டு நடனமாடவேண்டும் என விருப்பத்தை தெரிவித்தான். நாகலோகம் சென்று சிவழிபாடு செய்ய சிவன் அங்கு நடனமாட தேவர்கள் துந்துபி முழங்க அந்த நாதம் பிலத்தின் வழி 3மணிநேரம் இங்கு கேட்டது. நாகராஜன் “குங்கிலிய வழிபாடு” செய்து வழிபட்டதால் நாகநாதர் எனப் பெயர்.
கிராதகன் கொள்ளைக்காரன். முனிவர் ஒருவரை வழிமறித்து பொருள் கேட்டு துன்புறுத்த வர் தான் பேரையூர் சிவ வழிபாட்டிற்குச் செல்வதாகச் சொல்ல மனம்மாறிய கிராதகன் முனிவருடன் வந்து குங்கிலிய் வழிபாட்டு முறை அறியாமல் முனிவருடன் சேர்ந்து செய்ய மனம் மகிழ்ந்தார் சிவன். பல விஸ்வகர்மாவைப் படைக்க பிரம்மன் சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கி வழிபட்டு அருள்பெற்று பலநோக்கு விஸ்வகர்மாக்களைப் படைக்கும் திறன் கொண்டான்.
நாகதோஷம் கொண்டவர்கள் முதலில் நாகராஜனை வழிபட்டு பின் நாகநாதரையும் அம்மையையும் வழிபடவேண்டும். நாகதோஷம் இல்லாதவர்கள் முதலில் நாகநாதரையும் அம்மையும் வழிபட்டு பின் நாகராஜனை வழிபடவேண்டும். பலகல்வெட்டுகள். முதலாம் ராஜராஜன், மூன்றாம் ராஜராஜன், குலோத்துங்கன், சுந்தரபாண்டியன் திருப்பணி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)