ஊர்:திருபவளவண்ணன்#தி.தே-55
மூலவர்: ஸ்ரீபிரவாளவண்ணர்,பவளவண்ணர்-நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீபிரவாளவல்லி,ஸ்ரீபவளவல்லி,தனிக்கோவில்நாச்சியார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீபாலகிருஷ்ணன். ஸ்ரீஆண்டாள், ஸ்ரீஆழ்வார்கள்
5நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்-சக்ரவடிவில் குளம்,
வி-ப்ரவாள.
2காலபூஜை
தி.நே.0730-11,17-20
#30062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-98401 10092
யார் சிறந்தவர் என நாரதர் கேட்டபோது மகாலட்சுமி என பிரம்மன் சொன்னதால் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டாள் சரஸ்வதி. பிரம்மன் அஸ்வமேத யாகத்தை செய்ய ஆரம்பித்தார். யாகம் நடக்க மனைவி வேண்டும். சரஸ்வதி கோபத்தில் இருந்ததால் மற்ற மனைவியரான சாவித்திரி, காயத்திரி வைத்து நடத்த முடிவெடுத்தார். இதைக் கேள்விபட்ட சரஸ்வதி கோபங்கொண்டு யாகத்தைக் குலைக்க-நாமகள் அசுரர்களின் துணையுடன் வேகவதி நதியாக ஓடிவர உலக நலன் கருதி பிரம்மன் நடத்தும் யாகத்தை வெற்றிபெறச் செய்திட எண்ணங்கொண்ட திருமால் குறுக்கே அணையாக படுத்து தடுத்துவிட அப்போது சரஸ்வதிக்கு துணையாக வந்த கொடிய அரக்கர் கூட்டத்தை துவம்சம் செய்து அசுரர்களின் ரத்தம்தோய நின்ற ப்ரவாளேசவண்ணன்- ப்ரவாளேசம்-சிகப்பு பவள நிறம். குழந்தை வரம் தரும் பாலகிருஷ்ணன். 4யுகங்களிலும் கொண்ட 4வர்ணங்கள். மகாலட்சுமி விரும்பியதால் நீல நிறம் இல்லாமல் பவள நிறத்தில் தோற்றம் கொள்ள வீரட்டகாசத் தலத்தின் அருகில் ஓர் தீர்த்தம் உருவாக்கி அதில் பூத்த தாமரை மலர்களைக் கொண்டு சிவனை வழிபட சிவன்தோன்றி பெருமாளுக்கு பவளநிறம் அருள்புரிந்தார்.
பிருகுமுனி வந்ததை தெரிந்தும் அறியாததுபோல் திருமால் சயனகோலத்தில் லட்சுமியுடன் இருக்க கோபம் கொண்டவர் திருமாலைத் தன் காலால் எட்டி உதைத்தார். புன்னகையுடன் எழுந்த பெருமாள் என்னை உதைத்ததால் உங்கள் பாதம் வலித்திருக்குமே எனக்கூறி அவர் பாதங்களைப் பிடித்துவிட ஆரம்பித்தார். எத்தனை பெரிய தவறு செய்துவிட்டோம் என வருந்திய முனி அதற்கு பிராயசித்தமாக பலத்தலங்களில் வழிபட்டு நாரதர் ஆலோசனைப்படி இங்கு வந்து சக்ர தீர்த்தத்தில் நீராடி தவம் செய்து தன் தோஷங்கள் விலக வழிபட்டார். தாயார் சன்னதி முன் 8திசைஅதிபர்கள் சிற்பங்கள்.
சிறந்த ரத்தினங்களைக் கொண்டுவந்து தள்ளும் கடற்கரை உள்ள திருக்கடல் மல்லையில் வாழ்பவனே, திருமதில்கள் சூழ்ந்த காஞ்சியில் வசிப்பவனே, திருப்பேர் நகரில் எழுந்தருளியிருப்பவனே, அழகான கொன்றை மாலையை மார்பிலே தரித்து மலையரசனான இமாவானின் பெண்ணான பார்வதியைத் தன் இடப்புறத்தில் வைத்துள்ள சிவனை உன் திருமேனியின் ஒரு பகுதியில் கொண்டவனே, திருபாற்கடலில் பள்ளி கொண்டவனே, உயிர்களுக்கு நன்மை செய்ய அவதரித்தவனே, குளிர்ந்த திருமலையின் உச்சியில் நின்றவனே, பவளம்போல் இனிய திருமேனியை உடையவனே, எங்கே சென்றாய்! என்பகவானே உன்னைத்தேடி நான் இப்படி அலைகின்றேனே!- திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்-திருநெடுந்தாண்டகம்-2060
வரை படம்: விரிவாக்கு(enlarge)