ஊர்:அரியதுறை.அரணிநதிக்கரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவரமூர்த்தீஸ்வரர்
இறைவி: ஸ்ரீமரகதவல்லி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீகாலபைரவர்
தீர்-அரணிநதி.
மரம்-அரச.
தி.நே-0700-1200,1700-2000
சத்யபாமாவிற்காக பாரிஜாதமரத்தை அதன் அனுமதியின்றி பிடுங்கியதால் 1000ஆண்டுகள் மரமாக சாபம் பெற்ற அச்சுதன் அரச மரமாக நின்ற தலம். பிரம்மா கேட்டதிற்காக அரணிநதி கரையில் தவமிருக்க காலபைரவராக ஈசன் காட்சி. யமபயம் நீங்கும்.
காகபுஜண்டர்-வகுளாதேவிக்கு மகன் பிரம்மாவின் பேரன் ரோமமகரிஷி பிரதிஷ்டை செய்து வழிபட்டது. அரணை நதியில் கங்கை போங்கி வழிந்த தலம். யாகம் செய்ய பூலோகம் வந்த பிரம்மன் சுருட்டப்பள்ளியில் யாகம் செய்தார். யாகம் நிறைவு பெற்றபின் தன் பேரன் ரோமமகரிஷியை இங்கு தவம் செய்யச் சொன்னார். வருடத்திற்கு ஒருமுறைமட்டும் மூச்சு விட்டும் உணவு உண்டும் சிவனின் காட்சி கிடைக்கவில்லை. வருடத்திற்கு ஒருமுறை என்பதையும் நிறுத்தியதால் ஏற்பட்ட அக்னி தேவர்களை வாட்ட அவர்கள் பிரம்மனிடமும் அவர் ஆலோசனைப்படி ஈசனிடம் முறையிட்டனர். ரோமமக்ரிஷியைக் காணவேண்டிய காலம் வந்தது என சிவன் காட்சியளித்து அருள். மார்கண்டேயர், சுகர், முகுந்தரிஷி வழிபாடு.
முகுந்தன் இங்கு வந்து ரோமரிஷிக்கு பணிவிடை செய்தார். முகுந்தன் காசி செல்ல விரும்ப அவரைத் தனியே அனுப்ப விருப்பமில்லா ரோமமகரிஷி சிவனை வேண்ட, சிறுவன் உருவில் சிவன் வந்து முகுந்தனை நீ காசிக்குச் செல்ல வேண்டாம் என்றும் அரணி நதியில் மூழ்கி எழுந்திருக்கவும் அறிவுறை கூறி மறைந்தார். மருநாள் காலை அவ்விதம் அரணி நதியில் மூழ்க காசி பைரவர் காடியளித்தார். அவர்பின்னால் கங்கைநீர் நீராட்டியது. அரணி நதி கங்கை நீராகியது. வரமூர்த்தியூர் மருவி அரியதுறை ஆனது.
அரசன் சித்திர சேனனின் மனைவிக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இறக்க வாழ்வு வெறுத்தது. அவர்கள் ரோமமகரிஷியை வணங்கி தம் குறைகளைக் கூறிஆசி பெற்றனர். சில காலம் கழிந்தது. யாத்திரை வந்தபோது ஓர் பெண் குழந்தை விளையாடக் கண்ட அவர்களுக்கு ஓர் அசரீரி அந்தக் குழந்தையை எடுத்துச் செல்ல ஆணையிட்டது. அதன்படி அக்குழந்தையை எடுத்துவந்து மரகதவல்லி எனப் பெயரிட்டு வளர்த்தனர். வயது வந்ததும் சுயம்வரம் நடத்தினர். அப்போது அரண்மனை வாயிலில் ஒருவன் தேரில் வந்திறங்கி நேராக மரகதவல்லியை அடைந்து அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று தேரில் ஏறி போனான். அதிர்ச்சியடைந்த மன்னரும் மற்றவர்களும் அந்த ரதத்தைப் பின் தொடர அது ரோமமகரிஷியின் பர்ண சாலையில் நின்றது. பர்ணசாலையின் உள்ளே வந்த சித்திர சேனன் பார்வதி பரமேஸ்வரன் திருமணக் கோலம் கண்டு ஆச்சரியப்பட்டு நின்றான். சுதாரித்தவன் வணங்கினான். இதுவரை தன்னிடம் மதுரவல்லியாக வளர்ந்தது பார்வதி என அறிந்து சந்தோஷமடைந்தான். மரகதவல்லி -ஈசன் திருமணம்--வடதிருமணஞ்சேரி.
வரை படம்: விரிவாக்கு(enlarge