ஊர்: கொடும்பு
மூலவர்: ஸ்ரீகல்யாண சுப்ரமண்யர்,வள்ளி,தெய்வானை
இறைவன்: ஸ்ரீகோஷ்டீஸ்வரர்,
இறைவி: ஸ்ரீமரகதாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீநாகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீநவகிரகங்கள்
ஐந்துநிலை ராஜ கோபுரம் மரம்: செண்பகமரம்
தீர்: கிணறு
நான்குகாலபூஜைகள்-காரண ஆகமம் தி.நே-0530-1200,1630-2000
தலவரலாறு: சேரமன்னன் ஆட்சிக்குட்பட்ட கொடும்பை பகுதியில் தங்களது ஆடை தேவைகளுக்காக சோழ நாட்டு நெசவாளர் குடும்பங்களை அழைத்து வந்து சோகநாசினி நதிக்கரையில் குடி அமர்த்தினார்கள். அவர்கள் தங்களது தொழிலுக்காக அவினாசி அருகிலுள்ள இடங்களிலிருந்து நூல் வாங்கி வந்தனர். அப்படி நூல் வாங்கி வரும்போது ஒரு மண்மேட்டிலிருந்து என்னையும் அழைத்துப் போங்கள் என குரல்வர அங்கிருந்த முருகன் சிலையை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றி தாங்கள் இருக்குமிடம்வர அந்த மாடு அங்கிருந்த ஒரு சிவன் கோவிலருகில் படுத்துக் கொண்டது. அங்கு முருகனுக்கு கோவில் கட்டப்பட்டது. அங்கிருந்த நம்பூதிரிகள் மலையாள முறைப்படி பூஜை செய்ய வேண்டும் என்றும் நெசவாளர்கள் தமிழ் முறைப்படி பூஜை செய்ய வெண்டுமென்று சொல்லியதால் திருவுளச் சீட்டு போட்டு தமிழ் முறைப்படி பூஜை செய்ய முடிவானது. நம்பூதிரி அருகில் உள்ள 1கி.மீ நிலத்தை மான்யமாக எழுதி தந்தார்.
மகாமண்டபம் சிவன், முருகன் கோவிலுக்குப் பொதுவானது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)