ஊர்:போரூர்#உத்திரராமேஸ்வரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஇராமநாதஈஸ்வரர்
இறைவி: ஸ்ரீசிவகாமசுந்தரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ முருகன்-, ஸ்ரீபைரவர்
நிலைராஜகோபுரம்.
மரம்-நெல்லி
தீர்:
தி.நே-0600-1130,17-2030
#24072009-குருஸ்ரீ பகோரா பயணித்தது(61)
800 ஆண்டுகள் பழமையானது. சிவனுக்கும் சக்திக்கும் நடந்த நடனப் போட்டியில் தோற்ற உமை சினம் கொண்டு கடலினுள் மறைய சிவன் தரிசனம் கொடுத்த இடம் -இராமேஸ்வரம். அதனாலும் கோபம் குறையாமல் தன் அண்ணனிடம் காளி ரூபத்தில் தன் கணவனை நடனத்தில் ஆடி வெற்றி பெற்று அடக்கியாள வேண்டும் என்ற வரத்தினை பெற்று சிவன் காஞ்சியில் இருப்பது கண்டு அங்கு செல்ல இதை அறிந்த விஷ்ணு சிவனிடம் சொல்ல சிவன் காஞ்சி முழுவதும் லிங்கமாய்த் தெரிய பார்வதி திணற விஷ்ணு சிவனை மாங்காடு, போரூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில், மேலூர், கோவூர், திருநாகேஸ்வரம், சௌகார்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் மாறி மாறி வாசம் செய்யச் சொல்லி விட்டு தான் கங்கையில் தியானத்தில் அமர்ந்து விடுகிறார். இதை அறிந்த பார்வதி தன் அண்ணன் வேண்டுமென்றே தன் திருமணத்தை நடக்க விடாமல் தன்னை பிரித்து வைத்திருக்கின்றார் என்ற சந்தேகம் வரவே தான் தன் கணவரைப் பிரிந்து வாடுவதுபோல் நீயும் உன் மனைவியைப் பிரிந்து வாட வேண்டும் என அண்ணனைச் சபிக்கின்றாள். அதனால்தான் இராம அவதாரத்தில் சீதையை பிரிய வேண்டியிருக்கின்றது. அப்படிச் சீதையை தேடிவந்த ராமர் ஞானதிருஷ்டியில் பூமிக்கடியில் லிங்கம் கண்டு அதன் சிரசில் தன் கால்பட்டு தோஷம் ஏற்பட்டுவிட்டது என்று நெல்லிக்கணி உண்டு ஒரு மண்டலம் தவம் செய்து லிங்கத்தை வெளிக்கொணர்ந்து கட்டி யணைத்து அமிர்த லிங்கமாக மாற்றி-இராமநாத ஈசுவரர். சிவனிடம் சீதை இருக்குமிடம் அறிந்து இங்கிருந்து போருக்கு சென்றதால்- போரூர். இராமருக்கு குரு- சிவன்- விஷ்னுஅம்சம்- சிவனும் விஷ்னுவும் சேர்ந்தவராக காட்சி-உத்திரராமேஸ்வரம். இங்கு விபூதி- குங்குமம்+ தீர்த்தம்- ஜடாரி சேவையுடன் பிரசாதம். குரு- தட்சிணாமூர்த்தி தலம்- நிவேதம் சிவனுக்கு. குரு பரிகாரத்தலம். சென்னை-நவகிரகத்தலங்கள்-3/9
வரை படம்: விரிவாக்கு(enlarge)