இருபதேழு நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில் பிறந்தாலும் அந்த காலத்திற்குரிய கிரக தோஷங்கள் அவ்வுயிர்களை சோதிக்கும் வல்லமை உடையது. அப்படி சோதிக்கும்போது ஏற்படும் கிரக பலன்களின் தாக்கத்திலிருந்து விடுபட அவ்வுயிர்கள் கிரங்கங்களை வழிபட வேண்டியது அவசியமாகின்றது. பொதுவாக எந்த கிரக தோஷம் என்றாலும் கிரகங்கள் சுழர்சி முறையில் மீண்டும் மீண்டும் வரும் என்பதாலும் கிரக வழிபாடு முக்கியமாகின்றது. எனவே உயிர்கள் ஒன்பது கிரகங்களையும் வழிபட கும்பகோணத்தைச் சுற்றி நவகோள்கள் தல்ம் இருந்தாலும் சீர்கழி அருகே ஒன்பது கோள்களும் தங்கள் பாவம் நீங்க வழிபட்டதலங்களை வழிபடல் மிக நன்று.
தன்தகுதிமீறி நவகிரகங்கள் அருள்பாலித்ததால் தீராஉஷ்ணநோய் சாபத்திற்கு ஆளாகி 9பேரும் தவமிருந்த 9இடங்களான
1.திருகோலக்கா-சூரியன்,
2.தில்லைவிடங்கன்-சந்திரன்,
3.வைதீஸ்வரன்கோவில்-செவ்வாய்,
4.திருவெண்காடு-புதன்,
5.மயேந்திரப்பள்ளி-குரு,
6.சீர்காழி-சுக்கிரன்,
7.நிம்மேலி-சனி,
8.சிரபுரம்-ராகு,
9.செம்மாங்குடி-கேது
ஆகியதலங்களை வெள்ளிஅன்று வழிபட்டு இறுதியில் சட்டநாதஸ்வாமி கோவிலில் இரவு12மணி சுக்கிரவார்பூஜையில் கலந்துவழிபடின் நவக்கிரக்தோஷம் நீங்கி ஐஸ்வரியங்களுடன் பிரவிப்பயன் அடைவர்.அன்புடன் குருஸ்ரீ பகோரா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)