ஊர்:சீர்காழி.சீகாழி.#தி.த-68+மு. பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, சீரபுரம், பூந்தராய், புறவம், ஸ்ரீகாளி, கழுமலம், தோணிபுரம், சண்பை, கொச்சைவயம்.
மூலவர்:
இறைவன்:1.ஸ்ரீபிரமபுரீஸ்வரர்(சு)-பிரமன்பூசித்தலிங்கம்.
2.ஸ்ரீதோணியப்பர்-ஞானப்பால்தந்தவர்-குருவடிவம்,
3. ஸ்ரீசட்டையப்பர்-சங்கம வடிவம்-5'.(மாவலியிடம்3அடிமண்கேட்டு பெற்றதால் செருக்குற்ற விஷ்னுவை வடுகநாதர் மார்பில் அடித்து வீழ்த்த இலக்குமி மாங்கல்ய பிச்சை கேட்க அருள்-உயிர்பெற்ற விஷ்னு தம்தோல்+எலும்பை அணிந்துகொள்ள வேண்ட எலும்பை கதையாக் கொண்டு தோலைச் சட்டையாக போர்த்து அருள்-சட்டைநாதர்)வடுகநாதர்.
இறைவி:1.ஸ்ரீதிருநிலைநாயகி தனிசன்னதி.2.ஸ்ரீபெரியநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீதேவேந்திரலிங்கம். ஸ்ரீசுக்கிரன். ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீகாளிபுரீஸ்வர். ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை. சுதந்திர, சுயேச்சை, லோக, கால, உக்கிர, பிச்சையா, நிர்மாண, பீஷ்ண-8பைரவர்-வலம்புரிமண்டபத்தில்
7நி.கி.,தெ.ராஜகோபுரம்-4பு.கோபுரங்கள்.வ-5நி,மே-3நி பூட்டி
2பிரகாரங்கள்.
தீர்-பிரம,மற்றும்21,
மரம்-மூங்கில்,பாரிசாதம்.
4காலவழிபாடு.
தி.நே-06-12,16-20
#02102003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-04364-270235
திருஞானசம்பந்தர் அவதாரப்பதி-ஞானப்பாலுண்டு அற்புதங்கள் நிகழ்ந்ததலம். முருகன், காளி, பிரமன் , திருமால், குரு, இந்திரன், சூரியன், சந்திரன், அக்கினி, ஆதிஷேசன், ராகு, கேது, வியாசர் வழிபட்டது. இறைவன் மூங்கில் வடிவாக தோன்றியது. சூரனுக்குபயந்த தேவர்களுக்கு புகலிடம். குரு வழி பட்டுகுருத்துவம். பிராளயகாலத்தில் உமையோடு சுத்தமாயையைத் தோணியாக கொண்டு வந்தது. பூமியை பிளந்து சென்ற இரணியாக்கனை கொன்றது. தலை கூராகிய ராகு பூசித்தது. புறா வடிவில்வந்த அக்கினியால் சிபிநற்கதி. சண்பைப் புல்லால் மாய்ந்த குலத்தோரால் பழிதீர திருமால் வழிபட்டது. மச்சகந்தியை கூடிய பழிச்சோல்நீங்க பராசரர் பூசித்தல். மலத் தொகுதி நீங்க உரோமச முனி வழிபாடு. கனநாதநாயனார் வாழ்ந்த தலம். திருமுலைப்பால்ஊற்சவம் சிறப்பு. சட்டையப்பரை ஆண்கள் சட்டையின்றியும் பெண்கள் தலையிலுள்ள பூவை கையில் வைத்துகொண்டும் தரிசித்து பின்சூட வேண்டும். அசுரகுரு சுக்ராச்சியார் வலிமை குன்றி தவம் செய்து தேவருக்கு சமமான இடம், சஞ்சீவினி மந்திரம் பெற்றதலம். சுக்கிரத்தலம். திருவிடை மருதூர் பரிவாரத் தலம் -பைரவர்-6/9. 12/63- திருஞானசம்பந்தர். 13/63- கணநாத நாயனார். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(177)- பெற்ற தலம்.
சிவபெருமான் குரு மூர்த்தமாகவும், லிங்கமூர்த்தமாகவும், சங்கமூர்த்தமாகவும் மக்களுக்கு உபதேசம், கோவில்களில் அருளுதல், வேண்டுதல் ஏற்றளித்தல் என மூன்று நிலைகளில் அருள்கின்றார். இங்கு சட்டைநாதராக-ஸ்ரீ பைரவர் நிர்வாணமாகக் காட்சி தருகின்ரார். ஆகாச பைரவர். வலம்புரி மண்டபத்தில் அஷ்டபைரவர்கள். பிரகார ஊஞ்சலில் அருள்பவர்-ஆனந்த பைரவர் என்பர்.
தன் படைக்கும் தொழில் சிரமமின்றி நடைபெற பிரம்மன் வழிபட்டதால்-பிரம்மபுரம், இறைவன் மூங்கிலாகத் தோன்றி இந்திரனுக்கு அருள்-வேணுபுரம், சூரபத்மனுக்கு பயந்த தேவர்கள் புகலிடமாகக் கொண்டு பூஜித்ததால் புகலி, குரு தன்மை இழந்த வியாழன் வழிபட்டாதால் வெங்குரு, பிரளய காலத்தில் உயிர்கள் அழிந்தபோது பெருமான் சுத்த மாயையைத் தோணியாகக் கொண்டு தங்கியிருந்ததால்- தோணிபுரம், வராக மூர்த்தியை பூஜித்ததால்-பூந்தராய், தலை கூறாகிய ராகு வணங்கியதால்-சிரபுரம், சிபிச் சக்ரவர்த்தி மோட்சம் அடைந்ததால்-புறவம், கண்ணன் பூஜித்ததால் -சண்பை, மச்சகந்தியை கூடிய பழிச் சொல் நீங்க பராசர் வழிபட்டதால்- கொச்சைவயம், தன் மலத்தொலுதி நீங்க உரோமச முனிவர் வழிபாடு-கழுமலம், நடராஜரோடு வாதாடியதால் தன் பழி நீங்க ஸ்ரீ பத்ரகாளி பூஜித்தது-ஸ்ரீகாளிபுரம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)