ஊர்: மணிக்கிராமம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீ அழகேஸ்வரர்
இறைவி: ஸ்ரீ சௌந்திரநாயகி-நான்கு கரங்கள்.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ நாகர்,ஸ்ரீமுருகன் வள்ளி, தெய்வானை
மரம்: பன்னீர் மரம்,
தீர்: வேட்டைக்குளம்.
ஒருகால பூஜை தி.நே-0700-1200,1600-2000
1000 ஆண்டுகள் பழமை. தன்வந்திரி இங்கு வழிபாடு.
உடல் நல குறைபாடுகள் நீங்க வழிபாடு.
தலவரலாறு; கர்நாடகாவை அண்டுவந்த வல்லப மன்னனுக்கு நீண்டநாள் கழித்து பிறந்த குழந்தை பல்வேறு உடர் குறைகளுடன் இருந்தது. சிறிது நாளில் அக்குழந்தையை தோல் நோய் பற்ற மிகவும் வருந்திய மன்னன் என்ன செய்வது என்று தெரியாமல் அக்குழந்தையை காட்டில் விட்டு வரச் செய்தான். அக்குழந்தை தவழ்ந்து மதங்காசிரமம் -மணிக்கிராமத்தில் உள்ள அழகேஸ்வரர் கோவிலுக்குச் சென்றது. ஈசனை வணங்கியது. அங்கு வந்த அர்ச்சகர் அபிஷேகம் செய்து விட்டு அந்த நீரை அக்குழந்தைக்கு கொடுத்து நைவேத்தியம் செய்த பிரசாதத்தையும் கொடுத்தார். தினசரி அபிஷேக நீர் பிரசாதம் இராண்டையும் உட்கொள்ள அக்குழந்தையின் நோய் குணமடைந்தது. தினமும் இறைவனை வழிபட்டு அபிஷேகப் பிரசாதத்தை உண்டு வந்தான். ஒருநாள் இறைவன் தோன்றி அவனுக்கு வில், அம்புகளைக் கொடுத்து பலசாலியாகத் திகழ்வான் என ஆசி கூறி அவனது பெற்றோரைப் பற்றி தகவல் கொடுத்து அவர்களைச் சந்திக்கச் சொல்லி மறைந்தார். அர்ச்சகரிடம் விடைபெற்று தாய் தந்தையரைச் சந்தித்து விபரம் கூறினான். மன்னன் மகனுக்கு உடனே பட்டம் சூட்டி மகிழ்ந்தான். அவன் பல்லாண்டு நல் ஆட்சி புரிந்தான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)