ஊர்:பதஞ்சலீஸ்வரம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅனந்தீஸ்வரர் -புற்றுமணல் லிங்கம்.
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீபைரவர்,ஸ்ரீசனீஸ்வரர்,, ஸ்ரீமுருகன்-வள்லி தெய்வானை, ஸ்ரீகஜலட்சுமி
மரம்:
தீர்: பதஞ்சலி
தி.நே-0930-1130,1700-2100
சிவபெருமான் ஆடிய திருவாதிரை காட்சியை நினைத்து ஆனந்தப்பட்ட திருமாலிடம் தானும் அந்த நாட்டியத்தைக் காண ஆவல் கொண்டிருப்பதை தெரிவித்த ஆதிஷேசன பூலோகத்தில் அத்திரி மகரிஷி, அனுசூயாதேவி ஆகியோரின் புதல்வராக பிறந்தார். பதஞ்சலிமுனி எனப்பெயர். உடம்பின் கீழ்பாதி பாம்பைப் போலவும் மேல் பகுதி மனிதரைப் போலவும் இருந்தார். லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து தன் பூர்வ ஜென்ம பெயரான அனந்தன் அன்பதை நினைவில் கொண்டு அந்த லிங்கத்திற்கு அனந்தீஸ்வரர் எனப் பெயரிட்டு வழிபட்டார். மகிழ்வுற்ற சிவன் தில்லைவா எனக்கூறி மறைந்தார். தில்லையில் வியாக்ரபாதருக்கும் பதஞ்சலிக்கும் நடனமாடி காட்சி அருள். தான் எழுதிய பிழையற்ற சொற்களை சிந்தித்து சொல்ல உதவும் வியாக்கரணமகா பாஷ்யம் நூலை கற்க வந்த 1000 சீடர்களை தன் பார்வைபட்டால் எரிந்துவிடுவார்கள் என்பதால் தான் திரைமறைவில் இருந்து பாடம் எடுத்தார். ஆர்வம் மிகுதியால் ஒருசீடர் திரைநீக்கி பார்க்க ஆதிசேசன் அனல் மூச்சு பட்ட 999 பேர் சாம்பலாயினர். ஒருவர் வெளியில் சென்றதனால் குரு முன்சொன்னது போல பிரம்ம ராட்ஷசனாக மாறினார்.அவர் தான் கற்றதை சந்திரசர்மாவுக்கு கற்றுத்தந்து சாப விமோசனம் பெற்றார். இறந்த 999 பேருக்கும் தவமிருந்து சொர்க்கம் கிடைக்க இறைவனிடம் வேண்ட ஆனந்தமாய் ஆசீர்வாதம். பதஞ்சலிமுனி எழுதிய 3 சாஸ்திர நூல்கள். 1.யோகசூத்திரம்-அலையும் சுபாவமுள்ள மனசை கட்டுபடுத்தி மேம்படுத்த உதவுவது. 2.ஆத்ரேய சம்ஹிதை-உடல் ஆரோக்யத்திற்கு-ஆயுர்வேத சரகம். 3.வியாகரணமகாபாஷ்யம்- பிழையற்ற சொற்களை சிந்தித்து பேசும் முறை.
திருவிடை மருதூர் பரிவாரத் தலம்- நடராசர்-3/9. ராகுகேது தோஷம் பரிகாரத்தலம். தயிர் சாம பிரசாதம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)