ஊர்:திருஆதனூர்.தி.தே-11
மூலவர்:ஸ்ரீஆண்டளக்கும்ஐயன்-புஜங்கசயனம்-தலையின்கீழ்மரக்கால்,இடதுகரம் எழுத்தாணிஒலையுடன்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீமந்திரபீடேச்வரி,ஸ்ரீரங்கநாயகி உற்சவர்: ஸ்ரீஅழகியமணவாளன்-பார்க்கவி,கமல்வாசினி
பிறசன்னதிகள்:
தீர்-சூர்ய,சந்ர.
3நிலைராஜ.கோபுரம் மரம்-புன்னை,பாடலி.
வி-ப்ரணவ.
தி.நே-077-12,16-20
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு மதில் சுவர் கட்ட திருமங்கை ஆழ்வார் நினைத்தார். கோவிலை செப்பனிட பொருள் போதாமல் பெருமாளை வேண்ட ஆற்றங்கரைக்கு மாலையில் வரச்சொல்லி ஓர் அசரீரி கேட்க அங்கு சென்றார். ஓர் வியாபாரி வேடத்தில் மரக்கால், ஓலையுடன் வர நீர்யார் என கேட்க ஸ்ரீரங்கமணவாளன் அனுப்பினார், பெருமாளை வேண்டி மரக்காலில் மண்ணை அளக்கச் சொல்ல உன்மையாக உழைத்தவர்களுக்கு பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு மணலாகவும் தெரிந்தது. மணல் கண்டவர்கள் வியாபாரி மந்திரவாதி எனக்கூறி அடிக்க வர ஓடினார். அவருடன் மங்கையாழ்வாரும் ஓட ஓரிடத்தில் அந்த வியாபாரி அமர்ந்து தான் கொண்டுவந்த எழுத்தாணியால் எழுதிய இடமே ஆதனூர். இங்கு வந்து மறைந்தார். திருமங்கை ஆழ்வாருக்கு காட்சி. காமதேனு-தவம். ஆ+தன்+ஊர்- ஆதனூர். பிராட்டி பரிசளித்த மாலையை அவமதித்த இந்திரனை பிருகு சபிக்க சுகபோகங்களை இழந்த இந்திரன் சாபம் நீங்கிய தலம். பிரமனின் 5வது தலையை கிள்ளி எறிந்த சிவன் அக்னியைக்கூப்பிட்டு அந்தத் தலையை எரிக்க கூற அக்னியால் முடியவில்லை மேலும் அக்னியை அந்த பிரமஹத்தி தோஷம் பீடித்தது. சிவனைபிடித்த பிரமஹத்தி தோஷம் அக்னியையும் பிடிக்க அக்னி தவமிருந்த தலம். ஆதிசேஷன் திருமேனியில் சங்கு சக்ர அடையாளம். மணத்தூன்கள் சிறப்பு. வைகாசி பிரம்மோற்சவம் திருப்பாற்கடலில் மாகவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் வணங்கச் சென்ற பிருகுமுனி தனக்கு குழந்தை வேண்டி வழிபட மாகாவிஷ்ணு புன்னகைக்க மகாலட்சுயோ ஆசி வழங்கி மலர் பரிசாக அளித்தார். அதுபற்றி விஷ்ணூ கேட்க மகாலட்சுமி தான் பிருகுவின் மகளாக பிறக்க ஆசை எனக் கூறினாள். பின் இந்திரனைப் பார்க்கச் சென்ற பிருகு தனக்கு மகாலட்சுமி கொடுத்த மலரை இந்திரனுக்கு கொடுக்க இந்திரன் அதை ஐராவதத்திடம் கொடுக்க அது கண்ட பிருகு சாபமிட்டார். மாகாலட்சுமியின் மலரை தான் அவமதித்ததால் அந்தச் சாபம் என்பதை உணர்ந்த இந்திரன் மகாலட்சுமியிடம் சென்று தன் நிலை பற்றிக்கூறி வருந்த பூலோகப் பிறப்பில் பார்கவி- பெருமாள் திருமணம் ஆதனூரில் நடக்கும் போது நீ அங்கு வந்து உன் சாபத்தை விலக்கிக் கொள்வாய் என்றார். பெருமாளுக்கும் - பார்கவிக்கும் திருமணம் நடந்த ஊர் ஆதனூர். அதைக் கண்டு களித்த இந்திரன் சாபம் நீங்கியது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)