ஊர்:தொண்டி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசிதம்பரேசுவரர்
இறைவி: ஸ்ரீசிவகாமசுந்தரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
இராமர் வழிபட்டது. இராமயணம் 100 கோடி ஸ்லோகங்கள் கொண்டதாயிருந்தது. அதை உலக மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டி அவற்றைப் பிரித்துக் கொடுக்க இறைவனிடம் மூன்று உலகத்தாரும் வேண்டிட சிவன் 100 கோடியைப் பிரித்து ஒரு உலகத்திற்கு 33 கோடி ஸ்லோகங்கள் என்றும் மீதியுள்ள ஒரு கோடியை ஒவ்வொரு உலகத்திற்கும் 33லட்சம் என்றும் மீதியுள்ள ஒரு லட்சம் ஸ்லோகத்தை ஒவ்வொரு உலகத்திற்கும் 33ஆயிரம் ஸ்லோகம் என்றும் மீதியுள்ள ஆயிரம் ஸ்லோகத்தை ஒவ்வொரு உலகத்திற்கும் 33நூறாகவும் மீதியுள்ள நூறு ஸ்லோகத்தை ஒவ்வொரு உலகத்திற்கும் 33 ஆகவும் பிரித்துக் கொடுக்க பெருமானின் கணக்கை மிகவும் ரசித்த மூவுலகினர் மீதியுள்ள அந்த ஒன்றை எப்படி பிரிக்கப் போகிறார் என ஆச்சரியத்துடன் காத்திருந்தனர். மீதியுள்ள அந்த ஸ்லோகத்தில் 32 எழுத்துக்கள். மூன்று உலகத்திற்கும் ஒவ்வொருவருக்கும் பத்து எழுத்துக்கள் போக மீதியுள்ள இரண்டு எழுத்துக்கள் தனது பிரித்துக் கொடுக்கும் பணிக்கு என அதை எடுத்துக்கொண்டு காசி சென்றார். அவரைத் தொடர்ந்த உலகினர் அந்த இரண்டு எழுத்துக்கள் என்ன எனத் தெரிந்துகொள்ள ஆவலுடன் கேட்டபோது அது "இராம" என்பதே என்றார்.
தனது குடும்பத்தின் உணவிற்காக வேட்டையாட வந்தவன் ஏதும் சிக்காமல் வருந்தினான். அருகில் இருந்த தடாகத்திற்கு நீர் அருந்த மிருகங்கள் எப்படியும் வரும் என தன் குடுவையில் நீரை நிரப்பிக்கொண்டு அருகிலிருந்த மரத்தின் மீதேறி அமர்ந்தபோது மரத்தின் இலைகளும் குடுவை நீரும் சிந்த அவைகள் கீழே இருந்த லிங்கத்தின்மேல் பட்டது அது முதற் சாமம். சிறிது நேரத்தில் ஒரு மான் அங்கு நீர் அருந்த வர அதைக் கொல்ல குறிபார்த்தான். இதை அறிந்த மான் வேடனே என் சகோதரியும் அவள் குழந்தைகளும் என்னைக் காணாது வருந்துவர் அவர்களிடம் சொல்லிவிட்டு வந்து விடுகிறேன் என கூறியது கேட்ட வேடன் அனுமதித்தான். அது செல்லும் வழியைப் பார்க்க முயற்சித்தபோது சில இலைகளும் குடுவை நீரும் சிறிது லிங்கத்தின்மேல் விழுந்தது. அது இரண்டாம் சாமம். சிறிது நேரத்தில் வேறொரு மான் வர அதைக் குறிபார்த்தான். அப்போது அந்தமான் நான் எனது சகோதரியை தேடிவந்தேன். அவளிடம் சென்று விடைபெற்று வருகிறேன் எனக் கொஞ்சியது. இரக்கப்பட்ட வேடன் சம்மதிக்க அது செல்லும் வழியை காண முயற்சிக்க மரத்தின் இலைகள் சிலவும் நீரும் கீழே லிங்கத்தின்மேல் விழுந்தது. அது மூன்றாம் சாமம். மான்கள் இரண்டும் ஒன்றுகூடி முடிவெடுத்து சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடிவு செய்து வந்து கொண்டிருந்ததைக் கண்ட வேடன் ஒன்றிற்கு இராண்டு என சந்தோஷப்பட்டான். அப்போது உண்மை அறிந்த குட்டிகள் இரண்டும் தங்களின் தாய் இறந்தபின் தாங்கள் ஏன் உயிர் வாழவேண்டும் என்று அவைகளும் அங்குவர விபரம் அறிந்த வேடன் மனமிரங்கினான். மான்களின் ஒற்றுமையான பாசம் அவனை மெய்சிலிர்க்க வைக்க வேடன் கீழே இறங்க முற்பட மரத்தின் இலைகளும் நீரும் லிங்கத்தின்மேல் பட்டது. அது நான்காம் ஜாமமாயிற்று. வேடனுக்கு ஞானோதயம் ஏற்பட்டது. நாணயத்துடனும் பாசத்துடனும் விளங்கும் மான்கள் அவனின் அகக் கண்களைத் திறக்க மான்களைக் கொல்லாது விடுவித்தான். எதிர்பாராமல் செய்த 4காலபூஜைகளின் பயனால் வேடனுக்கு தேவகண பிராப்தம் கிட்டியது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)