ஊர்: திருக்கழுக்குன்றம்#+மு:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர்
இறைவி: ஸ்ரீதிரிபுரசுந்தரி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஜம்புகேஸ்வரர், ஸ்ரீஅருணாசலேஸ்வரர். ஸ்ரீஆத்மநாதர். ஸ்ரீஆறுமுகர்-மயில்மீது- வள்ளி தெய்வானை, ஸ்ரீஅஷ்டபுஜ துர்க்கை, ஸ்ரீஅகோர வீரபத்திரர்-6', ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீஜம்புலிங்கேஸ்வரர், ஸ்ரீஆத்மநாதர்,
7நி.ராஜகோபுரம்+5நி.உள்கோபுரம்.
மரம்-வாழை.
தீர்-சங்கு. நந்தி. கோடி, இந்திர, ருத்ரகோடி, வசிஷ்ட, கௌசிக, வருண, அகலிகை
5தேர்திருவிழா. தி.நே.0700-1200,1600-2000
#30122005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தாழக்கோயில்- சங்கு தீர்த்தம் புகழ்-12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு பிறக்கின்றது. கடல் உப்பு நீரில் பிறக்கும் சங்கு இங்கு நன்னீரில் பிறக்கின்றது. மார்கண்டேயர் திருக்கழுக்குன்றம் கோவில் வழிபட நினைத்த நேரம் குருபகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் வேளை. அந்த சமயத்தில் இறை வழிபாடு செய்தால் உடன் பலன் தரும் என நினைத்தார். அங்குள்ள குளத்தில் நீராடி, சிவ பூஜைக்குரிய நீரை எடுத்துச் செல்ல பாத்திரமின்றி ஈசனை வேண்ட உவர் நீரில் உருவாகக்கூடிய சங்கு நன்னீரில் உற்பத்தியாகி தோன்ற அதில் நீர் முகர்ந்து அபிஷேகத்திற்கு உபயோகித்தார். அன்றிலிருந்து இன்றுவரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு உற்பத்தியாகின்றது-சிறப்பு.
அனகை, அம்பை, இந்திரபுத்ரா, ருத்ரா, கங்கை, காளிந்தி, கவுதமை, கம்பை, காவேரி, சிங்கை, சிந்து, சோமம், சோவதி, தாமிரபரணி, துங்கபத்திரா, தென்குமரி, தேவிகை, நர்மதா, நந்தினி, பம்பை, பாலி பிராமி, பினாகி, மலைப்பிராதாரிணி, மந்தாத்ரி, மணிமுத்து, யமுனை, வேத்தராவதி, கைதாரிணி, வைகை ஆகிய நதிகளுக்குள் யார் பெரியவர்/ உயர்ந்தவர் என்ற விவாதம் ஏற்பட குரு கன்னி ராசியில் பிரவேசிக்கும் நாளான்று தேவர்கள், சித்தர்கள், ஜீவன் முக்தர்கள், ரிஷிகள், மனிதர்கள் அனைவரும் வேதகிரீஸ்வரரை வணங்கும் நாளில் சங்கு தீர்த்தத்தில் சங்கமித்து முடிவு செய்ய தீர்மானித்து சங்கு தீர்த்தம் வந்து சேர்ந்து வேதகிரீஸ்வரரை வணங்கினர். தேங்கி நிற்கும் குளம் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய சங்கு உற்பத்தி செய்கின்றது. மனிதர்களின் பாவங்களைப் போக்குகின்றது. பாயும் இடங்களை வளமாக்க வேண்டிய நீங்கள் கடமை மறந்து யார் உயர்ந்தவர் என அறிந்துகொள்ள வந்திருக்கின்றீர்கள் .அதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்றார் இறைவன். உண்மை உணர்ந்த நதிகள் தங்களின் அகங்காரம் நீங்கி இறைவனை வழிபட்டு இந்த நாள் போல் ஒவ்வொரு முறையும் அனைவரும் இதேபோன்று இங்கு குளத்தில் கலந்து வேதகிரீஸ்வரரை வழிபட வேண்டி வரம் பெற்றனர். சங்கு தீர்த்த புஷ்கரமேளா-12 ஆண்டுகளுக்கு ஒருமுறை.
மார்பில் ஸ்ரீசக்ரம் சிறப்பு. ஆண்டுக்கு 3நாடகள் மட்டும் அம்மனுக்கு அபிஷேகம். சங்கு தீர்த்தத்தில் அதிகாலை நீராடி மலை வலம் -நோய் நீங்கும். அழகான அஷ்டபஜதுர்க்கை சிற்பம். சித்திரை பெருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)