ஊர்: வல்லம், வசந்தீஸ்வரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவேதாந்தீஸ்வரர்-வசந்தபிரியன் கட்டியது
இறைவி: ஸ்ரீஞானம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகரிவரதராஜபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி கொம்மை கட்டியது, ஸ்ரீலிங்கம்-லக்கன் சோமயாஜி கட்டியது. ஸ்ரீஜியேஷ்டாதேவி, ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீசனீஸ்வரன், ஸ்ரீமுத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானை
மரம்:
தீர்:
ஒருகாலபூஜை
தி.நே-07-08 பிரதோஷநாளில் 1630-1830. மற்ற நேரங்களில் அழைத்தால் அர்ச்சகர் வருவார்.
குடவரைக் கோவில். வல்-கெட்டி, அம்- அழகு. அழகிய உறுதியான மலை-வல்லம். இறைவனைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற செருக்குற்று பெரும் மலையாக உருவெடுத்திருந்த வேதங்களின் செருக்கை அடக்க எண்ணம் கொண்ட சிவன் வல்லம் குன்றில் வாசம் செய்த திருமாலின் அனுமதியுடன் குன்றின்மேலேறி வேதகிரியைவிட உயர்ந்து நின்று தன் கரங்களால் வேதகிரியை அழுத்த வேதமலை சிதைவுற வேதங்களின் சீரும் சிறப்பும் மங்கின. மன்னிப்பு கோரிய வேதமலைமீது கோவில் கொண்டார். இந்த தகவல் அறிந்த பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் தன் சிற்றரசன் வந்தப்பிரியனிடம் கோவில் கட்ட உத்தரவிட அவன் தன் மகன் கந்தசேனனைடம் பொறுப்பை ஒப்படைக்க இங்கு குடவரைக் கோவில்கள் கட்டி வசந்தீஸ்வரம் எனப்பெயரிட்டான். வேதாந்தீஸ்வரரை வழிபட 75 சிறிய படிக்கட்டுகள் 5வாயில்கள்வழி செல்ல வேண்டும். சாபம் பெற்ற பிரம்மாவின் மைந்தர்கள் இருவரும் வேதமலையின் சிறப்பை உணர்ந்து தவம் செய்ததால் திருக்கழுக்குன்றமானது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: