ஊர்: திருநிலை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபெரியாண்டவர்
இறைவி: ஸ்ரீதிருநிலைநாயகி
உ:
பிறசன்னதிகள்: ருத்திராட்சமரமருகில் சிவன் மனித உருவில்,
மூன்று நிலைராஜகோபுரம்,
மரம்: ருத்ராட்சம்
தீர்: சித்தாமிர்தக் குளம்
தி.நே-0700-1900
சுந்திரபத்திரன் என்ற அசுரன் சிவசக்தி சொரூபத்தல் மட்டுமே தன்க்கு மரணம் என்றும் அதர்கு முன்னாள் பெருமான் மானிடராய் பிறந்திருக்க வேண்டும் என்று வரம் பெற்றான். அதனால் அகங்கரம் கொண்டு தேவர்கள் ரிஷிகளை தொந்தரவு செய்தான். அவர்கள் ஈசனிடம் முறையிட சிவன் பார்வதியிடம் சிவசக்தி ரூபமய் புறப்பட்டு அந்த அசுரனை அழிக்கச் சொன்னார். உமை அப்போது தியானத்தில் இருந்ததால் பேசாமல் இருக்கத் தன் சொல்லை அலட்சியம் செய்ததால் மானிடப் பிறப்பை அடைய சாபமிட்டார். தியானம் முடிந்ததும் பார்வதி என்னுள் பாதியாக நீங்களும் பூலோகத்தில் பிறக்க வேண்டினாள். உமை தன் சூலத்தை எறிய அது பூமியில் நிலைத்த இடத்தில் தெரிந்த ஒளியை நோக்கி மானிடரய் பிறந்த சிவன் சென்றார். சூலம் நிலத்தில் குத்தியபோது 21 மண் உருண்டைகள் சிதறி அவை சிவன் வரும்போது சிவகணங்களாக மாறின. அந்த இடத்தில் திருநிலையாய் பாதம் பதித்து ஓர் நிலையாய நின்றார் பெருமான். உலகில் வலவந்த் பெரிய மனிதராகிய நீங்கள் இங்கே தங்கி அருள் பாலிக்க உமை வேண்டுகோள்-பெரியாண்டவர். உமை என்னை நிலைகொள்ளச் செய்ததால்- திருநிலை நாயகி.
குழந்தை வேண்டி திருப்பரங்குன்ற ஈசனை வழிபட்ட சிவபக்தருக்கு வராகம் வழிகாட்ட திருநிலைக்குச் சென்று வழிபட அருள். வராகம் வழிகாட்டி விட்டு மறைந்த இடத்தில் லிங்கம் சுயம்பாகத் தோன்றவே அங்கு அருகில் வீடு அமைத்து தங்கி வழிபட்டனர். நாளடைவில் உயர்ந்த நிலை அடைந்தனர். மழலைச் செல்வமும் கிட்டியது. பக்தர்கள் பெரியாண்டவருக்கு தாங்களே அபிஷேகம் செய்யலாம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)